01

E   |   සි   |  

 திகதி: 2017-11-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1955/2017: கிராம அலுவலர்களுக்குக் கணினிகள் மற்றும் அலுவலக வாடகைக் கொடுப்பனவு: விபரம்

கௌரவ கனக ஹேரத்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராம அலுவலர்களின் கடமைகளை இலகுவாக்குவதற்காக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட கணினிகளை வழங்குதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

(ii) தற்போது கிராம அலுவலர்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் வழங்கப்பட்டுள்ள கணினிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) இதுவரை கிராம அலுவலர்களுக்கு கணினிகள் வழங்கப்படாதுள்ள மாவட்டங்கள் மற்றும் வழங்கப்படவுள்ள கணினிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) மேற்படி (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள கணினிகள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கிராம அலுவலர்களின் அலுவலகங்கள் பேணிவரப்படுகின்ற கட்டிடங்களுக்கான வாடகையாக அரசாங்கத்தினால் செலுத்தப்படுகின்ற கொடுப்பனவு கிராமிய மற்றும் நகர பிரதேசங்களுக்கமைவாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) செலுத்தப்படுகின்ற இக்கொடுப்பனவு காலத்துக்கேற்றவாறு போதுமானதாக அமைகின்றதா என்பதையும்;

(iii) போதுமானதாக இல்லாவிடின் இக்கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-10

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-11-10

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks