பார்க்க

E   |   සි   |  



சமீபத்திய செய்திகள்

ஜனவரி 21, 2026

அனைவருடனும் இணைந்து தைப்பொங்கலைக் கொண்டாவது பொதுவான மனிதநேயத்தின் சக்தியையும், ஒரு தேசமாக ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது - பாராளுமன்றத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு

பாராளுமன்றத்தில் அனைவருடனும் இணைந்து உண்மையான உற்சாகத்துடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் ஊடாக மனிதகுலத்தின் உண்மையான அழகும், இலங்கை தேசத்தின் ஒற்றுமையும் பிரதிபலிக்கின்றது என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தெரிவித்தார். ஒரு நாட்டில் அதன் மக்கள் தங்களுடைய கலாசார பன்முகத் தன்மையைப் பாதுகாத்து ஒரே தேசமாக ஒன்றிணையும்போதே அந்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.கடந்த 15ஆம் திகதி கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு பாராளுமன்றத்தில் இன்று (ஜன. 21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, விவசாயம் மற்றும் இயற்கையின் மீது இலங்கையர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான கொண்டாட்டமாகும் என்றார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் பாராளுமன்றப் பணியாளர்கள், பல்வேறு மத மற்றும் கலாச்சார பின்னணிகளைக் கொண்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தைப் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் இதுபோன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது ஒரு தனித்துவமான வாய்ப்பு என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்)  ஸ்ரீ பவானந்தராஜா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க கௌரவ சபாநாயகரின் வழிகாட்டிலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.தமிழ் கலாசாரம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அதற்கான மதிப்புக்களை  ஊக்குவித்தல், தமிழ் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மதித்தல் மற்றும் இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மைக்குள் ஒரு தேசிய அடையாளத்தை வளர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.பூஜைகளுடன் ஆரம்பமான இன்றைய நிகழ்வில் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வளாகத்தில் தைப்பொங்கல் இடம்பெற்றது. தமிழ் கலாசார நடனங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்வை மேலும் மெருகூட்டியிருந்தன.இந்த நிகழ்வில் மயூராபதி கோவிலின் பிரதான குருக்கள், கௌரவ  பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, கௌரவ சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் முனீர் முலாபர், கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, திணைக்களங்களின் தலைவர்கள், பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஜனவரி 21, 2026

அனைவருடனும் இணைந்து தைப்பொங்கலைக் கொண்டாவது பொதுவான மனிதநேயத்தின் சக்தியையும், ஒரு தேசமாக ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது - பாராளுமன்றத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு

பாராளுமன்றத்தில் அனைவருடனும் இணைந்து உண்மையான உற்சாகத்துடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் ஊடாக மனிதகுலத்தின் உண்மையான அழகும், இலங்கை தேசத்தின் ஒற்றுமையும் பிரதிபலிக்கின்றது என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தெரிவித்தார். ஒரு நாட்டில் அதன் மக்கள் தங்களுடைய கலாசார பன்முகத் தன்மையைப் பாதுகாத்து ஒரே தேசமாக ஒன்றிணையும்போதே அந்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.கடந்த 15ஆம் திகதி கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு பாராளுமன்றத்தில் இன்று (ஜன. 21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, விவசாயம் மற்றும் இயற்கையின் மீது இலங்கையர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான கொண்டாட்டமாகும் என்றார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் பாராளுமன்றப் பணியாளர்கள், பல்வேறு மத மற்றும் கலாச்சார பின்னணிகளைக் கொண்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தைப் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் இதுபோன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது ஒரு தனித்துவமான வாய்ப்பு என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்)  ஸ்ரீ பவானந்தராஜா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க கௌரவ சபாநாயகரின் வழிகாட்டிலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.தமிழ் கலாசாரம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அதற்கான மதிப்புக்களை  ஊக்குவித்தல், தமிழ் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மதித்தல் மற்றும் இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மைக்குள் ஒரு தேசிய அடையாளத்தை வளர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.பூஜைகளுடன் ஆரம்பமான இன்றைய நிகழ்வில் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வளாகத்தில் தைப்பொங்கல் இடம்பெற்றது. தமிழ் கலாசார நடனங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்வை மேலும் மெருகூட்டியிருந்தன.இந்த நிகழ்வில் மயூராபதி கோவிலின் பிரதான குருக்கள், கௌரவ  பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, கௌரவ சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் முனீர் முலாபர், கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, திணைக்களங்களின் தலைவர்கள், பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஜனவரி 21, 2026

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தில் 2026.01.20 தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (ஜன. 21) பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலம் 2025.12.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026.01.07 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலம், 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க முதன்மைச் சட்டத்தை திருத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதுடன், கரைகடந்த வாங்கித்தொழில் மற்றும் வரி தொடர்பான ஒழுங்குபடுத்தலையும் மேற்பார்வையையும் மேம்படுத்தல், செயல்நுணுக்க முக்கியத்துவம்வாய்ந்த வியாபாரங்கள் (BSI) தொடர்பான அளவுகோல்களை மேலும் திருத்தி தெளிவுபடுத்தல் இதன் நோக்கமாகும். இந்தத் திருத்தம் மூலம் பிராந்தியத்தில் நிதிசார் நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான மேற்பார்வை அறிமுகப்படுத்தப்படுவதுடன், விசேடமாக சர்வதேச தரநிலைகளுக்கு அமைய கரைகடந்த வங்கித்தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் இலங்கை மத்தியவங்கிக்கு அதிகாரமளிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த சட்டமூலத்தின் ஊடாக துறைமுக நகரத்தின் பொருளாதார கட்டமைப்பை, உலகளாவிய வங்கித்தொழில் தேவைகள் மற்றும் தேசிய நிதிசார் ஸ்திரத்தன்மை என்பவற்றுடன் சமநிலைப்படுத்தலும் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கமைய, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூம், 2026 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

ஜனவரி 19, 2026

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துவது குறித்த மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் விசேட நிகழ்வு ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில்

இயலாமையுடய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா தெரிவித்தார்.பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் "இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சிகளின் இரண்டாம் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த பாராளுமன்ற ஒன்றியத்தனால் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் குறித்த ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.சில்வா அவர்களின் தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடியபோதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இந்தத் தொடரின் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்கள் முறையே பெப்ரவரி 27ஆம் திகதி மட்டக்களப்பிலும், மார்ச் 27ஆம் திகதி பொலன்னறுவையிலும் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்பாட்டின் ஓர் அம்சமாக அமைச்சுக்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி சுகாதார அமைச்சிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித்.பி பெரேரா, (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம, சந்திம ஹெட்டிஆரச்சி, பத்மசிறி பண்டார, (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஜனவரி 19, 2026

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் அதிபர்களுடைய இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உப குழுவில் கலந்துரையாடல்

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் அதிபர்களுடைய இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பாடசாலைகளில் காணப்படும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பில் ஆராயும் உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த உபகுழு கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.கல்வி தொடர்பான ஐந்து தொழில்முறை சேவைகளையும் தகுதிகள் மற்றும் பதவி நிலைகளுக்கு ஏற்ப நிலைப்படுத்தல் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வெற்றிடங்களின் கணிப்பு  ஆகியவற்றைக் காண்பிக்கும் புதிய டிஜிட்டல் தரவுத்தளத்தை தயாரித்தல் போன்றவை தொடர்பில் குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு ஆராயப்பட்டன. அதிபர் சேவையில் முதல் தர அதிபர் பதவிகளில் உள்ள சகல அதிகாரிகளும் அதிபர் பதவிகளை மாத்திரம் வகித்தல், ஆறு வருட சேவையைப் பூர்த்தி செய்ததும் இடமாற்றங்களுக்கு உட்படுத்தல் போன்ற பல முன்மொழிவு குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இதற்கமைய, இந்த விடயங்கள் தொடர்பான அமைச்சின் பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை இரண்டு மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் பின்னரே குறித்த விடயம் தொடர்பான இறுதிப் பரிந்துரைகள் தயாரிக்கப்படும் என குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.உபகுழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் சுதத் வசந்த.த சில்வா ஆகியோரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






சபை அலுவல்கள்




அனைத்தும்  

ஜன.

22

பாராளுமன்ற நாட்காட்டி

அமர்வு நாட்கள்

முழு நாட்காட்டி

செய்திமடல்களுக்கு பதிவு செய்யவும்







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks