E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0260/ 2015 - கௌரவ (கலாநிதி) ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 260/ '15

      கெளரவ (டாக்டர்) ஏ. ஆர். ஏ. ஹபீஸ்,— மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொழும்பு மாவட்டத்தில் கொலொன்னாவை பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய பிரண்டியாவத்த, வெலேவத்த மற்றும் வென்னவத்த பகுதிகள் தாழ்நிலப் பிரதேசங்களாகும் என்பதையும்;

      (ii) அந்தப் பகுதிகள் ஊடாக கால்வாய்கள் நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாத காரணங்களினால் மழைக்காலங்களில் பிரதேசத்தின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், வணக்க ஸ்தலங்கள் உட்பட வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்குகின்றன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி கால்வாய்களைத் துப்பரவு செய்ய அறிவுரை வழங்குவாரா என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-18

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks