01

E   |   සි   |  

 திகதி: 2014-02-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3821/2014: பொது விளையாட்டரங்குகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் : மகாவலி 'எச்' வலயம்

3821/ ’13

கெளரவ பி. ஹரிசன்,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மகாவலி “எச்” வலயத்தின் ஆரம்பத் திட்டத்தின் படி பொது விளையாட்டரங்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணித்துண்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

           (ii)     மேற்படி வலயத்தில் பொது விளையாட்டரங்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அந்த ஒவ்வொரு இடத்தினதும் நிலப்பரப்பளவு தொகுதி அடிப்படையில் வெவ்வேறாக யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விளையாட்டரங்கிற்கும் உரித்தான காணிகளில் இருக்கும் அனுமதியற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(ii) இவர்கள் அந்த இடங்களில் குடியிருப்பதற்கு வந்த வருடங்கள் யாவை என்பதையும்;

(iii) இவர்களது பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;

(iv) அந்த அனுமதியற்ற குடியிருப்பாளர்களுக்கு வேறு சட்ட ரீதியான காணிகள் வழங்கப்பட்டிருப்பின் அவ்வாறு  காணிகளைப் பெற்றவர்களின் பெயர்கள், தொகுதி அடிப்படையில் யாவை என்பதையும்;

(v) இவர்களுக்கு நீர் மற்றும் மின்சாரம் பெற்றுக்கொள்ள மகாவலி அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்

(vi) அவ்வாறெனின் அது தொடர்பாக அழுத்தங்களை பிரயோகித்தவர்கள் யார் என்பதையும்;

(vii) மேலே குறிப்பிடப்பட்ட அனுமதியற்ற குடியிருப்பாளர்களை விளையாட்டரங்கிற்குரிய காணிகளிலிருந்து அகற்ற மகாவலி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் யாது என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-02-05

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-02-05

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks