01

E   |   සි   |  

 திகதி: 2014-02-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3430/2014: இலங்கைக்கே உரித்தான ஈரூடக வாழ், நன்னீர் உயிரினங்கள் : விபரம்

3430/ ’13

கெளரவ பி. ஹரிசன்,— வனசீவராசிகள் வளப் பேணுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள ஈரூடக வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

           (ii)     இவற்றில் இலங்கைக்கே உரித்தான ஈரூடக வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை  எவ்வளவென்பதையும்;

(iii) தற்போது அழிவடைந்துள்ள இலங்கைக்கே உரித்தான ஈரூடக வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்குஅறிவிப்பாரா?

(ஆ) (i) இந்நாட்டுக்கே உரித்தான நன்னீர் மீன் இனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) இவற்றில் தற்போது அழிவடைந்துள்ள இனங்கள் யாவை என்பதையும்;

(iii) இந்நாட்டுக்கே உரித்தான நன்னீர் மீன் இனங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவை என்பதையும்

அவர்குறிப்பிடுவாரா?

(இ) (i) இந்நாட்டுக்கே உரித்தான ஊர்வன இனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) இவற்றில் தற்போது அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இனங்கள்  யாவை என்தையும்;

(iii) மேற்படி ஊர்வன இனங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-02-05

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் வளப் பேணுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-02-05

பதில் அளித்தார்

கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks