E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1347/ 2025 - கௌரவ உபுல் கித்சிறி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1347/2025
      கௌரவ உபுல் கித்சிறி,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) புராதன மடுவன்வெல வலவ்வ நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதி யாதென்பதையும்;
      (ii) அதன் வரலாற்று முக்கியத்துவம் யாதென்பதையும்;
      (iii) மடுவன்வெல வலவ்வ தொல்பொருள் திணைக்களத்தால் சட்டரீதியாக கையகப்படுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
      (iv) கையகப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அதன் உரிமையாளர் யாரென்பதையும்;
      (v) கையகப்படுத்திய காணியின் விஸ்தீரணம் யாதென்பதையும்;
      (vi) அற்காகச் செலுத்தப்பட்ட மதிப்பீட்டுப் பெறுமதி எவ்வளவு என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) தொல்பொருள் திணைக்களம் மடுவன்வெல வலவ்வவை கையகப்படுத்துதல் தொடர்பாக வெளியிடப்பட்ட முதல் வர்த்தமானப் பத்திரிகையின் இலக்கம் மற்றும் திகதி யாதென்பதையும்;
      (ii) மேற்படி வர்த்தமானப் பத்திரிகையினைத் திருத்தம்செய்து இரண்டாவது வர்த்தமானப் பத்திரிகையொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;
      (iii) ஆமெனில், மேற்படி வர்த்தமானப் பத்திரிகையின் இலக்கம் மற்றும் திகதி யாதென்பதையும்;
      (iv) இரண்டாவது வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைவாக கையகப்படுத்திய காணியின் விஸ்தீரணம் யாதென்பதையும்;
      (v) மேற்படி வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைவாக நீக்கப்பட்ட காணியின் விஸ்தீரணம் யாதென்பதையும்;
      (vi) இது தொடர்பில் முறையான விசாரணையொன்று மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-12

கேட்டவர்

கௌரவ உபுல் கித்சிறி, பா.உ.

அமைச்சு

புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks