E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1343/ 2025 - கௌரவ லால் பிரேமநாத், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1343/2025
      கௌரவ லால் பிரேமநாத்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவில், காலி – மாதம்பை பிரதான வீதியில், இரத்தினபுரி பக்கம் திரும்பும் தெனியாய 51வது சந்தியில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணியொன்று உள்ளதா என்பதையும்;
      (ii) ஆமெனில், மேற்படி காணியின் தற்போதைய நிலைமையும் எத்தேவைகளுக்காக அக்காணி பயன்படுத்தப்படுகின்றது என்பதையும்;
      (iii) இதற்கு முன்னர் மேற்படி காணியில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்ததுடன், தற்போது இது மூடப்பட்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;
      (iv) இதனை மூடுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (v) மேற்படி காணியில் புதியதொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
      (vi) மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தை துரிதகதியில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-21

கேட்டவர்

கௌரவ லால் பிரேமநாத், பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks