பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1296/2025
கௌரவ நிமல் பலிஹேன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுரம், பஹல யாங் ஓயா கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டத்திற்கான நிதி மூலம் யாதென்பதையும்;
(iii) ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதையும்;
(iv) கருத்திட்டத்தின் மூலம் பயனடையும் பிரதேசங்கள் யாவையென்பதையும்;
(v) கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
(vi) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(vii) எத்திகதியில் மேற்படி கருத்திட்டம் நிறைவு செய்யப்படவுள்ளது என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி கருத்திட்டம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குச் சொந்தமான காணியின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) மேற்படி குடும்பங்களை குடியமர்த்துவதற்கு தேவையான காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், அக்காணிகள் யாவையென்பதையும்;
(iv) இடம்பெயரும் குடும்பங்களை அகற்றும் வழிமுறை யாதென்பதையும்;
(v) இடம்பெயர்ந்துள்ள போதிலும், இதுவரை இழப்பீடு வழங்கப்படாத குடும்பங்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;
(vi) அவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவதில் தாமதம் நிலவுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-09
கேட்டவர்
கௌரவ நிமல் பலிஹேன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks