E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1256/ 2025 - கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1256/2025
      கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) கடந்த அரசாங்க காலப்பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல உத்தியோகபூர்வ இல்லங்களைத் தவிர அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களால் பயன்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
      (ii) அத்தகைய அரசாங்க உத்தயோகபூர்வ இல்லங்களின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;
      (iii) அத்தகைய அரசாங்க உத்தயோகபூர்வ இல்லங்கள் குத்தகை அல்லது வாடகை அடிப்படையில் வேறு நிறுவனங்கள் அல்லது வணிக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iv) இத்தகைய அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-17

கேட்டவர்

கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks