E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1180/ 2025 - கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1180/2025
      கௌரவ சிவஞானம் சிறீதரன்,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) கிளிநொச்சி நகர மத்தியில் சதொச விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம் உரிய அங்கீகாரமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
      (ii) நிர்மாணப் பணிகளுக்குரிய அங்கீகாரம் கரைச்சி பிரதேச சபையிடமிருந்து உரிய முறையில் பெறப்பட்டுள்ளதா என்பதையும்;
      (iii) மேற்படி கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதி செலவிடப்பட்டிருக்குமானால், அதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட விலைமனுக் கோரல் பற்றிய விபரங்கள் யாவை என்பதையும்;
      (iv) நிர்மாணப் பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை எத்தனை மில்லியன் ரூபாய் என்பதையும்;
      (v) மேற்படி கட்டடத்தின் தற்போதைய உரிமையாளர் யாரென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) மேற்படி கட்டடம் அமைந்துள்ள காணியின் உரித்தைக் கொண்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;
      (ii) மேற்படி காணி நீண்ட காலக் குத்தகைக்கு யாதேனுமொரு தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-08

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks