01

E   |   සි   |  

 திகதி: 2018-09-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0226/2018: Resettlement of people of two villages

226/ '18

கௌவ டக்ளஸ் தேவானந்தா,— மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இரணையாலை மற்றும் ஆனந்தபுரம் பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்பதையும்;

(ii) மேற்படி மக்கள் அப் பிரதேசங்களில் காணிகளை சுத்தஞ்செய்கையில் பாரியளவில் வெடிபொருட்கள் கிடைத்துள்ளதோடு அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) இதனால் சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் வெடிபொருட்கள் உள்ளனவென அறிவித்தல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இப்பிரதேசத்தில் வெடிபொருட்களை அகற்றுவதற்காக இன்றளவில் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில் மேற்படி வெடிபொருட்களை முற்றாகவே அகற்றுவதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-04

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks