01

E   |   සි   |  

 திகதி: 2018-04-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

2342/2018: Relief for Samurdhi beneficiaries who risk losing their benefits

2342/ '17

கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போது நாட்டில் சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி நிவாரணங்களின் பெறுமதி வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) தற்போது நாட்டில் சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதா என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் புதிதாக சமுர்த்தி நிவாரணம் வழங்குதல் மற்றும் இடைநிறுத்தல் தொடர்பாக ஏற்புடைய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) சமுர்த்தி நிவாரணங்களை இடைநிறுத்துவதற்கு ஏற்புடைய பெயர் பட்டியலில் மிக வறிய மற்றும் அங்கவீன ஆட்களும் உள்ளார்கள் என்பதையும்;

அவர் அறிவாரா?

(இ) இவர்களுக்கு வேறு யாதேனும் நிவாரணம் வழங்கப்படுமா; இன்றேல், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-03

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks