01

E   |   සි   |  

 திகதி: 2017-12-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

2195/2017: Leasing out tea estates belonging to the Government to the private sector

2195 /'17

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்த தேயிலைத் தோட்டங்கள் நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் கம்பனிகளுக்கு குறைந்த பணத் தொகைக்கு வழங்கப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) மேற்படி தோட்டங்கள் குத்தகைக்கு விடப்படுகின்றபோது அரசாங்கத்தினால் அறவிடப்படும் பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(iii) அதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் யாவையென்பதையும்;

(iv) மேற்படி கம்பனிகள் குத்தகைத் தொகையைச் செலுத்தாது, நிபந்தனைகளை மீறி, தோட்டங்களை பராமரிக்காது அழிவடையச் செய்து வருகின்றதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;

(v) அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மீறப்பட்டு வருகின்றமையால், இத் தோட்டங்களை செழிப்படையச் செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கச் செய்ய அமைச்சு நடவடிக்கை எடுக்குமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-05

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks