01

E   |   සි   |  

 திகதி: 2017-08-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1712/2017: கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகள்: விபரம்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகள் எத்தனை பேர் என்பதையும்;

(ii) அவர்களில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது மரணமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதையும்;

(iii) டெங்குத் தொற்று காரணமாக கிண்ணியா வைத்தியசாலையில் வைத்தியர்கள், பணியாட்டொகுதியினர், கட்டில்கள் மற்றும் இடவசதிகளுக்கான பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றதா என்பதையும்;

(iv) இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளையும்;

(v) கிண்ணியா வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடானது நோயாளிகளை திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றுவதை கட்டாயப்படுத்தியுள்ளது என்பதையும்;

அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-23

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)           (i)       1574කි. (එක්දහස් පන්සිය හැත්තෑ හතරක්)

              (ii)       13කි.

              (iii)       නැත.

              (iv)       පැන නොනඟී.

              (v)       නැත.

(ආ)      පැන නොනඟී.

பதில் தேதி

2017-08-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks