01

E   |   සි   |  

 திகதி: 2017-08-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1305/2017: 2013 - 2016 மாத்தறை மாவட்டத்தில் பதிவான பெரும் குற்றச் செயல்கள்: விபரம்

கௌரவ டலஸ் அழகப்பெரும,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தில் பதிவாகியுள்ள பெரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பெரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குற்றச் செயல்களின் எண்ணிக்கை, குற்றச் செயல்களின் தன்மைக்கு அயை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(iii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பெரும் செயல்கள் தொடர்பாக குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) குற்றச் செயல்கள் பற்றி அறிக்கையிடுகின்றபோது பின்பற்ற வேண்டிய ஊடக ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான ஒழுக்க நெறிக் கோவையொன்றை தயாரிப்பதன் தேவையை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒழுக்க நெறிக் கோவையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) கடந்த ஆட்சிக்காலம் மற்றும் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இடம் பெற்றுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் இயல்பை பார்க்கும் போது நிலவிய அல்லது நிலவுகின்ற ஆட்சியுடன் ஏதேனும் தொடர்புகள் இருப்பதாக நம்புகின்றாரா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-10

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2018-08-10

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks