01

E   |   සි   |  

 திகதி: 2014-09-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

5030/2014: Betel Farmers

5030/ ’14

கௌரவ அகில விராஜ் காரியவசம்,— சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கையில் உள்ள  வெற்றிலை பயிர்ச் செய்கையாளர்களின் எண்ணிக்கை அண்ணளவாக யாது;

           (ii)     அதிகளவில் வெற்றிலை பயிரிடப்படும் பிரதேசங்கள் யாவை;

           (iii)    வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படும் பிரதானமான  நாடுகள் யாவை;

(iv) வெற்றிலை ஏற்றுமதியின் மூலம் வருடாந்தம் ஈட்டப்படும் வெளிநாட்டுச் செலாவணியின் அளவு யாது;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) வெற்றிலைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு மானிய முறையின் கீழ் உரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

(ii) உள்நாட்டுச் சந்தையில், மிகக் குறுகியதொரு காலப் பகுதியினுள் நடைபெறுகின்ற வெற்றிலையின் விலைத் தளம்பலை குறைப்பதற்கு உகந்ததொரு முறையியலை அறிமுகப்படுத்துவது தொடா்பில் ஆராயப்பட்டுள்ளதா;

(iii) வெற்றிலைப் பயிர்ச்செய்கை தொடா்பில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா;

(iv) ஆமெனில், மேற்படி ஆராய்ச்சிகளின் ஊடாக வெற்றிலைப் பயிர்ச்செய்கையின் நன்மைக்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கியமான கண்டுபிடிப்புக்கள் அல்லது விதப்புரைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-11

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

சிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks