01

E   |   සි   |  

 திகதி: 2014-09-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

4736/2014: Lahugala Maha Vidyalaya

4736/ ’14

கௌரவ (திருமதி) அனோமா கமகே,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அம்பாறை மாவட்டத்தின் லாஹுகல கிராமத்திலுள்ள லாஹுகல மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

           (ii)     நடாத்தப்படும் வகுப்புகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) அதிபர் உள்ளடங்கலாக ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) லாஹுகல கிராமத்தின் சிறுவர்களுக்கு கல்வி புகட்டுவதற்காகவுள்ள ஆரம்பப் பாடசாலை யாதென்பதையும்;

(ii) அண்மையில் அப்பாடசாலை சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினை யாதென்பதையும்;

(iii) மேற்படி கிராமத்திற்கு கிழக்கு மாகாண சபையின் அனுமதியுடன் அண்மையில் ஆரம்பப் பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டதா என்பதையும்;

(iv) அப்பாடசாலையின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி பாடசாலைகள் மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்பட்ட போதிலும் பொதுவாக இப்பாடசாலைகளில் சிறார்கள் தடங்கலின்றி கல்வி பயில்வதற்கான வசதிகளை வழங்குதல் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில். மேற்படி பாடசாலைகளில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-26

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks