01

E   |   සි   |  

 திகதி: 2014-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

4051/2014: Bridge across Kalu Ganga

4051/ ’13

கௌரவ அஜித் குமார,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இரத்தினபுரி பாணந்துறை வீதியில் எல்லகாவ முதல் தும்பர மானான, கெட்டேபொல பிரதேசங்களுக்குச் செல்கின்ற வீதியில் களுகங்கைக்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக பாலம்  சேதமடைந்துள்ளது என்பதையும்;

(ii) சேதமடைந்துள்ள மேற்படி பாலத்தின் மீது இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ்வண்டிகள் மற்றும் வேறு கனரக வாகனங்கள் செல்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் யாது என்பதையும்;

(iii) மேற்படி சேதமடைந்துள்ள பாலத்தைப் பயன்படுத்தும் போது இடம்பெறக்கூடிய விபத்தின் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார் என்பதையும்;

(iv) மேற்படி பாலம் சேதமடைந்துள்ளது என்றும், வாகனப் போக்குவரத்து அபாயகரமானதென்றும் அறிவுறுத்தி அறிவித்தல் பலகை பொருத்தப்பட்டுள்ளமை போதியதல்ல என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(v) ஆமெனில், மேற்படி தற்காலிக பாலத்திற்குப் பதிலாக நிரந்தர பாலமொன்றை  நிர்மாணிப்பாரா என்பதையும்;

(vi) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-20

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks