01

E   |   සි   |  

 திகதி: 2014-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

3825/2014: மருந்தகங்களைக் குளிரூட்டல்: மருந்து களஞ்சியப்படுத்தல்

3825/ ’13

கௌரவ பி. ஹரிசன்,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      இலங்கையின் அனைத்து மருந்தகங்களும் குளிரூட்டப்பட்டுள்ளதா என்பதையும்;

           (ii)     இன்றேல், இன்றளவில் குளிரூட்டப்படாத அத்தகைய மருந்தகங்களை கொண்டுநடாத்துவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இலங்கையின் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் காணப்படும் மருந்துக் களஞ்சியங்கள் குளிரூட்டப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(iii) அனைத்து மருந்து வகைகளையும் குளிரூட்டப்பட்ட இடங்களில் களஞ்சியப்படுத்துதல் அத்தியாவசியமானதா என்பதையும்;

(iv) இன்றேல், களஞ்சியப்படுத்தும்போது குளிரூட்டுதல் அத்தியாவசியமல்லாத மருந்து வகைகள் யாவை என்பதையும்;

(v) அத்தகைய மருந்துகளுக்கு காலாவதியாகும் கால எல்லைகள் கிடையாதா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-07

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-03-07

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks