01

E   |   සි   |  

 திகதி: 2013-11-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

3732/2013: ஒரே நபர் இரு நிறுவனங்களில் பதவிவகித்தல் : நடவடிக்கை

3732/ ’13

கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் மேலதிக பொதுமுகாமையாளர் பதவியை வகிப்பவரின் பெயர் யாது;

           (ii)    மேற்படி பதவியை வகிப்பவரினால் பெற்றுக் கொள்ளப்படும் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வளவு

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராண்மையில் பொது முகாமையாளர் பதவியை வகிப்பவரின் பெயர் யாது;

(ii) மேற்படி பதவியை வகிப்பவரினால் பெறப்படும் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வளவு;

(iii) மேற்படி பதவியை வகிப்பவருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சருக்கும் இடையே உறவு முறை காணப்படுகின்றதா;

(iv) ஆமெனின், அந்த உறவு முறை யாது

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) ஒரே நபரால் மேலே குறிப்டப்பட்ட இரண்டு நிறுவனங்களிலும் பதவி வகிக்க முடியுமா;

(ii) இதன்படி இரண்டு நிறுவனங்களிலும் பதவி வகித்தல் தவறாக இருப்பின், அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-23

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-03-06

பதில் அளித்தார்

கௌரவ டிலான் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks