01

E   |   සි   |  

 திகதி: 2014-06-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3594/2014: தெவிநுவர பிரதேச செயலாளர் பிரிவு வயற்காணிகள் : அனுமதியற்ற மீட்பு

3594/ ’13

கௌரவ புத்திக பதிரண,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     தெவிநுவர பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் வயற் காணிகள் மீட்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டுவதை அறிவாரா என்பதையும்;

           (ii)    2005 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை மேற்படி பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் அனுமதியின்றி மீட்கப்பட்டுள்ள வயற் காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி அனுமதியற்ற காணி மீட்புகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா  என்பதையும்;

(iv) ஆமெனில், கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(v) மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

(vi) இதற்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை தெவிநுவர பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் வயற் காணிகளை மீட்பதற்கு சட்ட ரீதியாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மீட்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள வயற் காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி வயற் காணிகளை மீட்பதற்கு அனுமதி வழங்கியமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவார?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-06-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-06

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks