01

E   |   සි   |  

 திகதி: 2013-06-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

3209/2013: ஓய்வுபெற்ற இ.போ.ச. ஊழியர்கள் : நிலுவை ஓய்வூதியப் பணிக்கொடை

3209/ ’12

கெளரவ ஆர்.எம். ரன்ஜித் மத்தும பண்டார,—  போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2012 மே 01 உலக தொழிலாளர் தினத்தில் அதிமேதகு ஜனாதிபதி இ.போ.ச. ஓய்வுபெற்ற ஊழியர்களில் சிறு தொகையினருக்கு மாத்திரம் அடையாள ரீதியில் நிலுவை ஓய்வூதியப் பணிக்கொடை செலுத்தியுள்ளார் என்பதை அவர் அறிவாரா?

(ஆ) 1978-1991 காலத்தினுள் பணியாற்றி ஓய்வுபெற்ற இ.போ.ச. ஊழியர்களில்,

(i) முழுமையாக ஓய்வூதியப் பணிக்கொடை செலுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) ஓய்வூதிய பணிக்கொடையில் ஒரு பகுதி மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மேற்படி இ.போ.ச. ஊழியர்களின் நிலுவை ஓய்வூதியப் பணிக்கொடையை துரிதமாக வழங்குமாறு வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு இதுவரை எவ்வளவு காலம் கடந்துள்ளது என்பதையும்;

(ii) இ.போ.ச. ஓய்வுபெற்றோர்களின் நிலுவை ஓய்வூதியப் பணிக்கொடையை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-18

கேட்டவர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-06-18

பதில் அளித்தார்

கௌரவ குமார வெல்கம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks