01

E   |   සි   |  

 திகதி: 2012-11-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

2865/2012: Mr. A. N. M. Thaheer

2865/ ’12

கெளரவ எம். ரீ. ஹசன் அலி,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      ஹொரொவ்பத்தனை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிக்கொண்டிருந்த திரு ஏ.என்.எம் தாஹிர் (25878) சுகயீனம் காரணமாக, பொலிஸ்மா அதிபரின் 190 /2009 ஆம் இலக்க, 2009/12/30 ஆம் திகதிய சுற்றறிக்கைக்கமைய 2009.06.06 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளாரென்பதையும்;

(ii) 2006.02.24 ஆம் திகதியிலிருந்து பொலிஸ் நிரந்தர சேவைக்கு நியமிக்கப்பட்ட இவருடைய சேவையை உள்ளீர்ப்பதற்கான  விதப்புரை Staff/DIG/IG/ Out/259/11 மற்றும் 2011.10.04 ஆம் திகதிய கடிதம் மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) திரு. தாஹிரை பொலிஸ் நிரந்தர சேவைக்கு உள்ளீர்த்து ஓய்வூதிய கொடுப்பனவையும் ஏற்புடைய சம்பளத்தையும் துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-16

கேட்டவர்

கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks