பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1220/2025
கௌரவ சுரங்க ரத்நாயக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹொரோவ்பதான யானைகள் தடுப்பு மத்திய நிலையத்தில் இன்றளவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்டு யானைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி நிலையத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பு எத்தனை ஏக்கர் என்பதையும்;
(iii) அந்த வளாகத்தில் இருந்த பயிர்ச் செய்கை நிலங்களின் அளவு எத்தனை ஏக்கர் என்பதையும்;
(iv) அந்தக் காணிகளுக்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று பயிர்ச் செய்கை நிலங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி மத்திய நிலையம் யானைகளின் வழித்தடமொன்றில் அமைத்துள்ளதால், அதனூடாக பயணிக்கும் காட்டு யானைகளுக்கு மாற்று வழிகள் இன்றி, அவை வேறு பயிர்ச் செய்கை நிலங்களூடாகச் செல்வதனால் பயிர் சேதங்கள் ஏற்படுவதை அறிவாரா என்பதையும்;
(ii) அதற்காக வழங்கப்படும் தீர்வுகள் யாவை என்பதையும்;
(iii) காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்காக இழப்பீடு வழங்க எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்;
(iv) தமது காணிகளுக்கான உறுதிகள் அல்லது அனுமதிப்பத்திரம் இல்லாத விவசாயிகளுக்கு பயிர்சேதங்களுக்கான இழப்பீடு செலுத்தப்படாதா என்பதையும்;
(v) ஆமெனில், அவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் விதம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-23
கேட்டவர்
கௌரவ சுரங்க ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks