01

E   |   සි   |  

 திகதி: 2014-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

2734/2014: Anicut -Guru - Ela, Malsiripura

2734/ ’12

கெளரவ சஜித் பிரேமதாஸ,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மெல்சிறிபுர உஸ்ஆர குருஎல அணைக்கட்டு மூலமாக செய்கை பண்ணக்கூடிய வயல்களின் ஏக்கரளவு எவ்வளவென்பதையும்;

           (ii)     மேற்படி அணைக்கட்டின் மூலம் தங்கி வாழும் கமக்காரக் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றளவில் மேலே குறிப்பிட்ட குருஎல அணைக்கட்டு உடைந்துள்ளதோடு, அதன் கீழ் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏறக்குறைய 500 கமக்காரக் குடும்பங்கள் நீரின்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை அவர் அறிவாரா?

(இ) (i) குருஎல அணைக்கட்டினை மறுசீரமைப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்காக செலவிடும் மொத்தப் பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(iii) மே்றபடி மறுசீரமைப்புப் பணிகள் நிறைவுசெய்யப்படும் திகதி யாதென்பதையும்

(iv) மேற்படி அணைக்கட்டு மறுசீரமைக்கப்படும் வரை சிரமங்களுக்குள்ளாகிய கமக்காரக் குடும்பங்களுக்கு நட்டஈட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-07

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks