E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0901/ 2025 - கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 901/2025
      கௌரவ ரோஹித​ அபேகுணவர்தன,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கை மின்சார சபையின் பிராந்திய அலுவலகங்களின் எண்ணிக்கை யாது;
      (ii) அவற்றில் போதுமானளவு ஊழியர்கள் உள்ளனரா;
      (iii) அவ்வலுவலகங்களுக்குத் தேவைப்படும் பொறியியலாளர்களின் எண்ணிக்கை யாது;
      (iv) மேற்படி எண்ணிக்கையிலான பொறியியலாளர்கள் உள்ளனரா;
      (v) இன்றேல், பொறியியலாளர் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது;
      (vi) புதிய பொறியியலாளர்கள் ஆட்சேர்த்துக் கொள்ளப்படுவார்களா;
      (vii) ஆமெனில், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
      என்பதை அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) (i) மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மூலங்கள் யாவை;
      (ii) இன்றளவில் மேற்படி ஒவ்வொரு மூலத்திலிருந்தும் உற்பத்திச் செய்யப்படும் அலகுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
      (iii) இலங்கை மின்சார சபை தனியார்மயப்படுத்தப்படுமா;
      (iv) ஆமெனில், அதன் ஊழியர்கள் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
      என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
      (இ) (i) சபையின் கீழுள்ள கம்பெனிகளில் இன்றளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மூலோபாய நிகழ்ச்சித் திட்டங்கள் / கருத்திட்டங்கள் யாவை;
      (ii) இன்றளவில் மேற்படி ஒவ்வொரு கம்பெனியிலும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
      (iii) மேற்படி கம்பெனிகளில் ஊழியர் மிகை காணப்படுகின்றதா;
      (iv) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு கம்பெனியிலும் காணப்படும் ஊழியர் மிகை வெவ்வேறாக யாது;
      (v) இலங்கை மின்சாரக் கம்பெனியால் எப்பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது;
      என்பதையும் அவர் மேலும் குறிப்பிடுவாரா?
      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-12

கேட்டவர்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks