E   |   සි   |  

 திகதி: 2025-10-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0625/2025: தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள்: பணியாளர்களுக்கான வெற்றிடங்கள்

625/2025
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண சபை பாடசாலைகளில் இன்றளவில் கடமையாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, அந்தப் பாடசாலைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அப்பாடசாலைகளில் இன்றளவில் காணப்படுகின்ற பணியாளர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(ii) தேசிய பாடசாலைகளில் பணியாளர்கள் மிகையாக காணப்படுகையில், மாகாண சபை பாடசாலைகளில் பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) அரசாங்கப் பாடசாலைக் கட்டமைப்பினுள் பணியாளர்களை உரிய இடங்களில் பணியமர்த்த மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-10

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-11-26

பதில் அளித்தார்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks