E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0507/ 2025 - கௌரவ தினேஷ் ஹேமந்த, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 507/2025
      கௌரவ தினேஷ் ஹேமந்த,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையிலுள்ள யானை தடுப்பு மின்சார வேலிகளை பாதுகாப்பதற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள யானை தடுப்பு வேலி பயிலுனர் உதவியாளர்களின் எண்ணிக்கை எத்தனை;
      (ii) இவர்களில் தற்போது சேவையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள யானை தடுப்பு வேலி பயிலுனர் உதவியாளர்களின் எண்ணிக்கை எத்தனை;
      (iii) இன்றளவில் சேவையில் நிரந்தரமாக்கப்படாத யானை தடுப்பு வேலி பயிலுனர் உதவியாளர்களை சேவையில் நிரந்தரமாக்குவதற்கு சட்டரீதியான தடைகள் காணப்படுகின்றனவா;
      (iv) இன்றேல், இவர்கள் நிரந்தரமாக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;
      (v) சேவையில் நிரந்தரமாக்கப்படாத யானை தடுப்பு வேலி பயிலுனர் உதவியாளர்களை நிரந்தரமாக்குவதற்கு திட்டவட்டமானதொரு வேலைத்திட்டம் காணப்படுகின்றதா;
      (vi) ஆமெனின், அவ்வேலைத்திட்டம் யாது;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-19

கேட்டவர்

கௌரவ தினேஷ் ஹேமந்த, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-03-19

பதில் அளித்தார்

கௌரவ எண்டன் ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks