01

E   |   සි   |  

 திகதி: 2025-03-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0505/2025: பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டங்கள்: குடிநீர் திட்டங்கள்

505/2025

கௌரவ கிட்ணன் செல்வராஜ்,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பெருந்தோட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்பதை அறிவாரா;

(ii) 1992 ஆம் ஆண்டின் பின்னர் அரச மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் (TRUST) பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிநீர் கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை;

(iii) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் செலவிடப்பட்ட பணத்தொகை மற்றும் தற்போதைய நிலைமை வெவ்வேறாக யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பதுளை மாவட்டத்தின், பூனாகல LLG, கெப்கடை புதிய குடியிருப்புத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் கருத்திட்டம் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு;

(iii) இன்றளவில் இந்நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதா;

என்பதையும் அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-18

கேட்டவர்

கௌரவ கிட்ணன் செல்வராஜ், பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)    (i)        ஆம்.

இந்த வரிசையிலுள்ள பெரும்பாலான தோட்டங்கள் மற்றும் பிற வீடுகள் இயற்கை நீர் ஆதாரங்களால் சூழப்பட்டிருந்தாலும், பொது நீர்த் திட்டத்திலிருந்தோ அல்லது தனித்தனியாகவோ நீர் வசதிகளைப் பெற்றிருந்தாலும், தோராயமாக 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரைப் பெறுகின்றார்கள்.

(ii) எங்கள் தரவுகளின்படி, 2004 முதல் 2024  வரை பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங் களில் செயற்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

அரசு நிதியுடனும் பெருந்தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளையாலும் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான குடிநீர்த் திட்டங்களின் எண்ணிக்கை

91

தேசிய நீ்ர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தால் மேற்கொள்ளப்படும் குடிநீர்த் திட்டங்களின் எண்ணிக்கை

12

மொத்த எண்ணிக்கை

103

(iii) திட்டச் செலவுகள் தனித்தனியாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும், அரச நிதியைப் பயன்படுத்தி செயற்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களுக்கான தோராயமான செலவு ரூ. 209,125,085.32 ஆகும்.

கணிசமான எண்ணிக்கையிலான திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர நீண்ட காலம் தேவைப்பட்டதனால், தனித்தனியாக ஆய்வை நடத்தாமல் அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலையைக் கூறுவது கடினம்.

பதுளை மாவட்டத்தில் அமைச்சின் ஏற்பாடுகளின்கீழ் 2004 - 2022 காலகட்டத்தில் செயற்படுத்தப்பட்ட நீர் வழங்கல்  திட்டங்களின் எண்ணிக்கை

ஆண்டு

திட்ட அளவு

செலவிடப்பட்ட தொகை (ரூ.)

2004

26

5,202,088.31

2006

5

1,331,644.25

2010

5

1,474,362.14

2014

2

597,739.85

2015

3

2,489,985.09

2016

13

3,832,570.05

2016

4

3,388,483.50

2017

6

2,906,370.48

2017

11

21,913,747.66

2018

1

704,250.14

2021

14

29,083,416.54

2024

1

3,218,547.42

மொத்தம்

91

76,143,205.43

2004 - 2022 காலகட்டத்தில் பதுளை மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தால் மேற்கொள்ளப் பட்ட திட்டங்களின் எண்ணிக்கை

ஆண்டு

திட்ட அளவு

செலவிடப்பட்ட தொகை (ரூ.)

2021

10

11,834,740.48

2024

2

121,147,139.41

மொத்தம்

12

132,981,879.89

மொத்த நீர் வழங்கல் திட்டங்களின் எண்ணிக்கை

செலவழித்த மொத்தத் தொகை

103

209,125,085.32

 

(ஆ) (i) இது அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு பயனாளிகளின் உழைப்பைப் பயன்படுத்திச் செயற்படுத்தப்படும் ஒரு வீட்டு வசதித் திட்டமாகும். இந்த நோக்கத்துக்காகச் செயற்படுத்தப்பட்ட இந்த நீர்த் திட்டம், மதிப்பீடுகளின்படி, செப்ரெம்பர் 20, 2020 அன்று நிறைவடைந்தது. 

(ii) எங்களுடைய அறிக்கைகளின்படி, இந்தத் திட்டத்துக்காகச்  செலவிடப்பட்ட தொகை ரூ. 1,017,677.60 ஆகும்.

திட்டத்துக்காகச் செலவிடப்பட்ட தொகை - ரூ. 978,536.15

மேலாண்மைச் செலவுகளுக்காகச் - ரூ.  39,141.45

செலவிடப்பட்ட தொகை

--------------------

மொத்தத் தொகை - ரூ. 1,017,677.60

=============

(iii) முழுத் தொகையும் செலுத்தப்பட்டுவிட்டது.

(இ) ஏற்புடையதன்று.

பதில் தேதி

2025-03-18

பதில் அளித்தார்

கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks