E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0276/ 2025 - கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 276/2024
      கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் என்பவற்றில் ஊழியர்கள் சார்பாக புதிதாகத் திறக்கப்படும் கோப்புக்களின் எண்ணிக்கையை, பொருளாதார அபிவிருத்தியைக் கண்காணிக்கும் அளவீட்டு அலகாகப் பயன்படுத்த முடியும் என்பதை அறிவாரா என்பதையும்;
      (ii) 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் என்பவற்றில்​ புதிதாகத் திறக்கப்பட்ட கோப்புக்களின் எண்ணிக்கை வெவ்வோறாக யாதென்பதையும்;
      (iii) 2024 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடக்கம் ஒவ்வொரு மாதமும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் என்பவற்றில்​ புதிதாகத் திறக்கப்பட்ட கோப்புக்களின் எண்ணிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      (iv) ஆமெனில், அத்தகவல்கள் மாதத்தின் எத்திகதியில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-08

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-04-08

பதில் அளித்தார்

கௌரவ அனில் ஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks