01

E   |   සි   |  

 திகதி: 2012-01-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

1923/2012: Coconut Cultivation Board - Coconut Plants

1923/ ’11

 

கெளரவ காமினி ஜயவிக்ரம பெரேரா,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தெங்குப் பயிர்ச்செய்கைச் சபையின் கீழுள்ள தெங்கு நாற்றுமேடைகள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;

           (ii)    மேற்படி நாற்றுமேடைகளுக்கான விதை தேங்காய்கள் தெரிவுசெய்யப்பட்ட தாய் மரங்களிலிருந்து பெறப்படுகிறன்தா என்பதையும்;

(iii) அவ்வாறாயின் தாய்மரங்களின் எண்ணிக்கை மற்றும் தாய்மரங்கள் காணப்படும் தோட்டங்களின் எண்ணிக்கை தென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) மேற்குறிப்பிட்ட தெங்கு நாற்றுமேடைகளிலிருந்து,

(i) 2010ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தென்னங் கன்றுகளின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சிறுபோகத்திலும் பெரும்போகத்திலும்  வழங்கப்பட்ட தென்னங் கன்றுகளின் எண்ணிக்கை வருடவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) தெங்கு ஆராய்ச்சி சபையின் கீழுள்ள காணிகளின் அளவு எத்தனை ஏக்கர் என்பதையும்;

(ii) தெங்கு ஆராய்ச்சி சபையினால் 2010ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ள தென்னங் கன்றுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) விதை தேங்காய் நாற்றுமேடையிடப்படும் நடைமுறை யாதென்பதையும்;

(iv) தெங்கு ஆராய்ச்சி சபை விதை தேங்காய்களைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(v) மேற்படி நிறுவனங்கள் 2009/2010 ஆண்டுகளில் வழங்கியுள்ள விதை தேங்காய்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(vi) மேற்படி விதை தேங்காய்கள் செழிப்பான தாய்மரங்களிலிருந்து பெறப்படவில்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(vii) ஆமெனின், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-01-18

கேட்டவர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks