01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0885/2019: Loans given to new businesses in Anuradhapura District under Enterprise Sri Lanka scheme

885/ '19

கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நிதி அமைச்சரின் கீழ் "என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது;

(ii) அதன் அடிப்படை நோக்கம் யாது;

(iii) தற்போது குறிப்பிட்ட நோக்கம் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டுள்ளது;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) 2019.03.08 ஆம் திகதியளவில் களுத்துறை மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் கீழ் கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ள புதிய தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை யாது ;

(ii) வழங்கப்பட்டுள்ள இக்கடனானது ஒவ்வொரு தொழில்முயற்சிகளுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) 2019.03.08 ஆம் திகதியளவில் அநுராதபுரம் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் கீழ் கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ள புதிய தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை யாது;

(ii) வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கடனானது ஒவ்வொரு தொழில்முயற்சிக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

(iii) அநுராதபுர மாவட்டத்தில், கடன் வழங்கல் திட்டத்தின் நோக்கங்கள் எவ்வளவு தூரம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன;

(iv) மேற்படி இரு மாவட்டங்களுக்கும் இடையே, குறிப்பிட்ட இக்கருத்திட்டத்தை செயற்படுத்துவதில் வேறுபாடு காணப்படுகின்றதா;

(v) அதனை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-19

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks