01

E   |   සි   |  

 திகதி: 2019-08-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0613/2019: “உதாகம கருத்திட்டம்: விபரம்

613/ '18

கௌரவ ஆனந்த அளுத்கமகே,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) நல்லாட்சி அரசாங்கம் தொடங்கிய நாள் முதல் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை "உதாகம" கருத்திட்டத்தின் கீழ்,

(i) ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்களின் மொத்த எண்ணிக்கை;

(ii) நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை;

(iii) செலவிடப்பட்ட முழுத் தொகை;

எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) அக் கருத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்தில்,

(i) ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களின் எண்ணிக்கை;

(ii) வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்;

(iii) நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ள திட்டங்களின் எண்ணிக்கை;

(iv) செலவிடப்பட்டுள்ள முழுத் தொகை;

எவ்வளவென்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) கண்டி மாவட்டத்தில் எதிர்காலத்தில் வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும் அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-22

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-10-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks