01

E   |   සි   |  

 திகதி: 2019-07-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0577/2019: மல்லவபிட்டிய இலங்கை மின்சார சபை அலுவலக வளாக மின்பிறப்பாக்கி: சுற்றாடல் பிரச்சினை

577/'19

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) குருநாகல், மல்லவபிட்டிய இலங்கை மின்சார சபை அலுவலக வளாகத்தில் பாரிய மின்பிறப்பாக்கி இயந்திரத் தொகுதியொன்று நிறுவப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) இந்த இயந்திரங்கள் இயங்கும்போது எழும் அதிக ஒலி காரணமாக சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்த இயந்திரங்களை பொருத்துவதற்கு சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், சுற்றாடல் மதிப்பீட்டை மேற்கொண்ட நிறுவனம் யாது என்பதையும்;

(iii) இப்பிரச்சினையைத் தீர்க்க அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-26

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-07-26

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks