01

E   |   සි   |  

 திகதி: 2018-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2114/2018: Wild elephant threat to resettled people

2114/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓலுமடு, மன்னாக்கண்டல் மற்றும் கறிப்பட்டமுறிப்பு ஆகிய கிராமங்களில் மீள குடியமர்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றார்கள் என்பதையும்;

(ii) அம்மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட காலம் தொடக்கம் அப்பிரதேசங்களில் நிலவும் காட்டு யானை அச்சுறுத்தல் காரணமாக பெரும் தொகையானோர் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதால் இவர்களின் வாழ்வாதாரமான விவசாய நடவடிக்கைகள் அழிந்தும் சேதமடைந்தும் வருகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து அம்மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-02-21

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks