01

E   |   සි   |  

 திகதி: 2012-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2235/2012: House - Rajapoopathy Maaligai

2235/ ’12

 

கெளரவ ராஜீவ விஜேசிங்க,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் பிரதி  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      சாவகச்சேரியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வி.என். நவரத்தினம் அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமானதும் பழைய  பொலிஸ் நிலைய ஒழுங்கையில் அமைந்துள்ளதுமான “இராஜபூபதி மாளிகை” என்று அழைக்கப்படும் வீட்டில் அநாதை இல்லம் ஒன்று நடைபெறுவதாக சொல்லப்படுவதையும்;

(ii) அதன் உண்மையான  உரிமையாளரிடம்  ஒழுங்கான உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ளாமல்  வேறொரு  தரப்பினர்  அநாதை இல்லத்தை  நடாத்துவதற்கு  அவ்வீட்டை  பயன்படுத்துகின்றனர் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்கூறப்பட்ட இடத்தில் எத்தனை அநாதைகள், உள்ளனர் என்பதையும்;

(ii) மேற்கூறப்பட்ட இடம் அதிகாரிகளின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

(iii) அந்த அநாதை இல்லத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் ஏதும்  நடைபெறவில்லையா  என்பதையும்;

அவர் இச்சபைக்கு  தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-06-19

கேட்டவர்

கௌரவ கெளரவ ராஜீவ விஜேசிங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks