01

E   |   සි   |  

 திகதி: 2011-12-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

1670/2011: A/L Examination - Candidates

1670/ ’11

 

கெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,—  உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     கடந்த ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர) பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர் எண்ணிக்கையில் பல்கலைக்கழக அனுமதிபெறத் தகைமைபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மாவட்ட அடிப்படையிலும் ஒவ்வொரு மொழிமூல அடிப்படையிலும் யாது;

(ii) பல்கலைக்கழகத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஏதேனும் வழிமுறையை மேற்கொள்ள கருதியுள்ளாரா;

(iii) ஆமெனில், அவ்வழிமுறை யாது

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இந்நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகளில் அனுமதிக்கப்படுவதற்கான புலமைப்பரிசில் திட்டமொன்றோ அல்லது வேறு வழிமுறையொன்றோ தற்போது நடைமுறையில் உள்ளதா;

(ii) ஆமெனில், அது யாது

என்பதை இவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

(ii) எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற நடவடிக்கைள் யாவை

என்பதை இவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-12-16

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks