01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0874/2019: Consultants for developing Horana road between Pepiliyana and Pamankada

874/ '18

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஹொரணை வீதியூடான பெப்பிலியான மற்றும் பாமன்கட ஆகியவற்றுக்கு இடையிலான அபிவிருத்தி வேலையை நிறுத்தியமைக்கான காரணங்களையும்;

(ii) இலகு ரயில் கருத்திட்டத்திற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட வேலை நிறைவுசெய்யப்படக்கூடாதா என்பதையும்;

(iii) இலகு ரயில் கருத்திட்டம் மீதான ஆலோசனை நடவடிக்கைகள் மற்றும் அரச ஆய்வுகருவிகள் மற்றும் பிரச்சாரம் மீது ஏற்கனவே செலவிடப்பட்டிருக்கும் தொகையையும்;

(iv) மேலே (iii) இல் குறிப்பிட்டவாறு செலவிடப்பட்ட பணத்தில் ஜப்பான் வழங்கிய டொலர் நிதி எவ்வளவு என்பதையும்;

(v) மேற்கூறிய கருத்திட்டத்திற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு ஆலோசகர்கள் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்களினால் விதந்துரைக்கப்பட்டிருக்கின்றனரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-11-07

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks