02

E   |   සි   |  

2026-02-12

செய்தி வகைகள் : செய்திகள் 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 7வது ஆசிய பிராந்திய மாநாடு மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆசிய, தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களின் இணைந்த இரண்டாவது மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத் தூதுக்குழு பங்கேற்பு

பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி நகரில் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 7வது ஆசிய பிராந்திய மாநாடு மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆசிய, தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களின் இணைந்த இரண்டாவது மாநாட்டில் கௌரவ பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர். இது “பாராளுமன்றங்களின் எதிர்காலம் : நம்பிக்கை, உள்ளடக்கம், புத்தாக்கம் மற்றும் சமாதானம் என்பவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மறுவரையறை செய்தல்” என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சிந்து மாநில சட்டமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைப் பாராளுமன்றத் தூதுக் குழுவில் கௌரவ வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலகட, சுஜீவ திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் அங்கம் வகித்தனர். பெப்ரவரி 03ஆம் திகதி இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பாகிஸ்தானின் தேசிய பேரவையின் கௌரவ சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் பங்கேற்றார். இந்த மாநாடு பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் இருந்து பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய சட்டமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  தலைமைதாங்கும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது.

“சமாதானம் மற்றும் ஜனநாய நம்பிக்கை : நல்லிணக்கத்திற்கான இயந்திரமாகப் பாராளுமன்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், சமீபத்திய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களைத் தொடர்ந்து ஜனநாயக நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பிய இலங்கையின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நவீன பாராளுமன்றங்கள் மக்களின் குரல்களை செவிமடுக்கும், உரையாடல்களை ஊக்குவிக்கும், வெளிப்படைத் தன்மையின் ஊடாகப் பொறுப்புக் கூறலைப் பலப்படுத்தும், குழுக்களை மேற்பார்வை செய்யும், ஊழலுக்கு எதிரான பொறிமுறை, இளைஞயோரின் பங்களிப்பு போன்றவற்றை வலுப்படுத்தும் நிறுவனங்களாக செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அத்துடன், நீடித்த சமாதானம் மற்றும் ஜனநாயகத்தின் நிலைத்தன்மைக்கு அத்தியாவசியமான அடித்தளங்களாக நல்லிணக்கமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“பாராளுமன்றக் கல்வி : நாளாந்த வாழ்க்கையில் ஜனநாயகக் கொள்கைகளை ஆழமாகப் பதியச்செய்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றுமொரு அமர்வில் இலங்கையின் கட்டமைக்கப்பட்ட பிரஜைகள் கல்வி அமைப்பு, மாணவர் பாராளுமன்றங்கள், இளைஞர் பாராளுமன்ற முயற்சிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் நடவடிக்கைகள் குறித்து பிரதி சபாநாயகர் விளக்கமளித்தார். பாடசாலை மட்டம் முதல் பெரியோர் வரையில் நாட்டுப் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தின் ஆட்சி மற்றும் பாராளுமன்றப் பொறுப்புக்கூறல் குறித்து கல்வி வழங்குவது மிகவும் முக்கியம்வாய்ந்தது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“சமாதானம் நிறைந்த மற்றும் ஒற்றுமையான சமூகங்களின் முன்னணியாகப் பாராளுமன்றங்கள் : போலியான செய்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல்களின் அதிகரிப்பு”,  “உய்வுக்கான சட்டமியற்றல் : காலநிலைகளுக்கு முகங்கொடுத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் குரல்கள்”, “பாலினம், தொழில்நுட்பம் மற்றும் நம்பிக்கை : ஒன்லைன் வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் துறையின் கையாளல்” என்ற தலைப்புக்களில் இடம்பெற்ற அமர்வுகளில் கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலக்கட, சுஜீவ திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் கலந்துகொண்டு, பங்களித்தனர்.

இறுதிநாள் அமர்வில் நன்றியுரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், ஆசிய பிராந்தியத்தின் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியம், பொதுநலவாய ஒன்றியத்தின் சிந்து கிளை, பாகிஸ்தான் தேசிய பேரவை போன்றவை வழங்கிய சிறப்பான விருந்தோம்பல் மற்றும் ஏற்பாடுகளுக்கு நன்றி பாராட்டினார். இந்த மாநாடு கலந்துரையாடல்களுக்கும், கற்றல்களுக்கும் மதிப்பு மிக்க மேடையாக அமைந்தது என்று குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தின் மதிப்புக்களைப் பாதுகாப்பதில் வலுவான பாராளுமன்றங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன், கராச்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பொதுநலவாய நாடுகளின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் முன்கொண்டு செல்லப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக ஆட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாதிக்கம், பாராளுமன்ற பொறுப்புக் கூறல், உள்ளடங்கலான நிர்வாகம், பொறுப்புவாய்ந்த புத்தாக்கம், நீடித்த சமாதானம் ஆகியவற்றிற்கான தங்களின் கூட்டு அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில் கராச்சி பிரகடனத்தை அனைத்துப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர். பொதுமக்கள் நம்பிக்கையின் சரிவு, தவறான மற்றும் வழுவான தகவல்களின் பரவல், சமூக ஒதுக்கல், காலநிலை பாதிப்புக்குட்படும் நிலை மற்றும் அதிவேக தொழில்நுட்ப மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்காக ஒத்துழைப்பும் பாராளுமன்ற இராஜதந்திர முயற்சிகளும் அவசியம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். இதனை முன்னெடுக்க வெளிப்படைத்தன்மை, பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் முன்னோக்குப் பார்வை கொண்ட பாராளுமன்றங்கள் இன்றியமையாதவை என்ற பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதாக இம்மாநாடு முடிவுக்கு வந்தது.



தொடர்புடைய செய்திகள்

2026-03-12

சட்டமூலங்கள் இரண்டை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் 2026.03.06ஆம் திகதி சான்றுரைப்படுத்தினார்.இந்தச் சட்டமூலங்கள் 2026 பெப்ரவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன.நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக ஆள்கடலில் அபாயகரமான அவுடத கடத்தல்கள் மற்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்குத் தற்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துகின்றன.இதற்கு அமைய நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமாகவும், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமாகவும் நடைமுறைக்குவருகின்றன.


2026-03-11

பாராளுமன்றம் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை கூடும்

உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் மார்ச் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் பாராளுமன்றம் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவுள்ளது. இந்தக் காலப்பகுதிக்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய தீர்மானம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2026.03.06 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய 2026 மார்ச் 17ம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் குறித்த விவாதம் இடம்பெற்று அங்கீகரிக்கப்படவுள்ளது.இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும்  ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 18ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.  இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். 2026 மார்ச் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை 19.03.2026 ஆம் திகதி எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான  விவாதம் இரண்டாவது நாளும் தொடரும்.


2026-03-03

வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அலுவல்களில் மாற்றம் – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

2026 மார்ச் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கான பாராளுமன்ற அலுவல்களில் மாற்றங்களை மேற்கொள்ள கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (மார்ச் 03) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதற்கு அமைய அன்றையதினத்திற்குத் திட்டமிடப்பட்டிருந்த தனியார் உறுப்பினர் பிரேரணைகளைப் பிறிதொரு தினத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும், இதற்குப் பதிலாக பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஜனாதிபதியின் பிரகடனம் உள்ளடக்கப்பட்ட தீர்மானத்தை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், பி.ப 5.00 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான பிரகடனம் விவாதம் இன்றி அனுமதிக்கப்படவுள்ளதுடன், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.அதேநேரம், இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய அன்றையதினம், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன், புதன் (04) மற்றும் வியாழக்கிழமைகளுக்கான (05) பாராளுமன்ற அலுவல்கள் முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய முன்னெடுக்கப்படும்.


2026-02-26

பாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதிவரை கூடும்

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்  இரண்டாம் மதிப்பீடு விவாதம் மார்ச் 04ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒத்திவைப்பு விவாதம் மார்ச் 05ஆம் திகதிபாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடவுள்ளது. கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய 2026 மார்ச் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2467/67ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும்  ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 04ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 05ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை மார்ச் 08ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்தனியார் உறுப்பினர் பிரேரணைகௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிதேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்.கௌரவ சமிந்த விஜேசிறிவாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்.கௌரவ ரவி கருணாநாயக்கபுலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்.கௌரவ லால் பிரேமநாத்அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.கௌரவ ரோஹண பண்டாரபேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்.கௌரவ நலின் பண்டார ஜயமஹபெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்.கௌரவ ரவீந்திர பண்டாரபைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்.இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks