logo

E   |   සි   |  

2008-07-08

செய்தி வகைகள் : செய்திகள் 

கெளரவ கீதாஞ்சன குணவர்தன அவர்கள் பிரதிச் சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்கின்றார்

கெளரவ கீதாஞ்சன குணவர்தன அவர்கள் 2008 ஜூலை மாதம் 01 ஆம் திகதி பிரதிச் சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்தார். இவர் 2004 ஏப்பிரல் 22 ஆந் திகதியிலிருந்து இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகராக கடமையாற்றினார்.

பிரதிச் சபாநாயகர் பதவிக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கெளரவ பியங்கர ஜயரத்ன அவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து அவர் இன்றைய தினம் சபையில் ஆற்றிய உரை பின்வருமாறு.


கெளரவ சபாநாயகர் அவர்களே,

புத்தளம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இரண்டாவது தடவையும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பியங்கர ஜயரத்ன அவர்கள், பிரதிச் சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையையிட்டு எனது நல்வாழ்த்துக்களை சகோதர உறுப்பினர்களுடன் சேர்ந்து தெரிவித்துக்கொள்கின்றேன். 1989 இல் அவரது அன்புத் தந்தையான முன்னாள் அமைச்சர் கெளரவ எஸ்.டீ.ஆர். ஜயரத்ன அவர்களுடன் பாராளுமன்றத்தில் மிகவும் நெருக்கமாகச் செயலாற்றிய ஒரு உறுப்பினர் என்றவகையில், அத்தகைய உன்னதமான தந்தையhரின் புதல்வர் மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டமையையிட்டு நான் மிக மகிழ்ச்சியடைந்தேன் என்பதை மனப்பூர்வமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதேபோன்று கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, உங்களது கடமையின் போது எம் அனைவருடைய ஒத்துழைப்புடன் இப்பணியைச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு எதிர்காலத்தில் உங்களுக்கு சக்தியும் துணிவும் கிடைக்கட்டுமாக எனப் பிரார்த்திக்கின்றேன்.

1948 இல் இருந்து 60 வருட காலமாக முன்னேற்றம் கண்டுள்ள பாராளுமன்றச் சனநாயகத்தையும், இது தொடர்பில் மக்கள் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப உங்களால் முடியுமென நாம் நம்புகிறோம்.

கெளரவ சபாநாயகர் அவர்களே,

உங்களுடன் கலந்துரையாடியவாறு, இவற்றுக்கு மேலதிகமாக இவ்வெற்றிடம் உருவாகியமைக்கான காரணம் தொடர்பில் ஒருசில விடயங்களையிட்டு உரையாட எதிர்பார்க்கின்றேன்.

2004 ஏப்ரில் மாதம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து நிறுவப்பட்ட அரசாங்கத்தின் ஆளுங்கட்சியின் மக்கள் ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக இரண்டாவது தடவையும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டேன். இதற்கு முன்னர் 1989 இல் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் திரு. தினேஷ் குணவர்தன அவர்களுடன் பாராளுமன்றத்தில் மக்கள் ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மூவரில் ஒருவராக 05 வருட காலம் பாராளுமன்றத்தில் சேவையாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

1994 இல் இருந்து 2004 வரையிலான காலத்தினுள் முழுநேரஅரசியலில் ஈடுபட்டு, மக்கள் ஐக்கிய முன்னணி என்ற வகையிலும், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதோடு, கொழும்பு மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளேன். அதேநேரம் போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளராகச் சேவையாற்றும் பொருட்டு 2000 ஆம் ஆண்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நான் இராஜினாமாச் செய்தேன்.

2004 இல் பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை முதலில் நான் நிராகரித்த போதிலும், முன்னாள் சபாநாயகர் கெளரவ அனுர பண்டாரநாயக்க அவர்களினதும், அப்போதைய பிரதம அமைச்சர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் வேண்டுகோளின்பேரில் இப்பதவிக்காக முன்வருவதற்கு இணங்கினேன். இதற்கிணங்க அனைவரினதும் ஒத்துழைப்புடன் பிரதிச் சபாநாயகர் பதவிக்குப் போட்டியின்றித் தெரிவு செய்யப்படுவதற்கு முடியுமாயிற்று.

கெளரவ சபாநாயகர் அவர்களே,

உங்களுடன் கலந்துரையாடியதன் பிரகாரம் இந்த வெற்றிடம் தோன்ற ஏதுவாக அமைந்த காரணங்கள் பற்றி இதற்கு மேலதிகமாக ஒருசில வார்த்தைகள் குறிப்பிட விரும்புகிறேன்.

2004 ஏப்பிரல் மாதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் ஆளுங்கட்சியின் மக்கள் ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்றத்தில் இணைந்தேன். இதற்கு முன்னர் 1989ல் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவH;;; தினேஷ் குணவர்தன அவர்களுடன் மக்கள் ஐக்கிய முன்னணி உறுப்பினHகள் மூவரில் ஒருவராக 05 வருடங்கள் பாராளுமன்றத்தில் செயலாற்ற வாய்ப்பு கிடைத்தது.

1994 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் முழுநேர அரசியலில் ஈடுபட்டு, மக்கள் ஐக்கிய முன்னணி என்ற வகையிலும், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு கொழும்பு மாநகர சபையின் நகரசபை உறுப்பினராகவும் செயலாற்றினேன். அவ்வேளையில் போக்குவரத்து அமைச்சரின் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றும்பொருட்டு 2000ஆம் ஆண்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினா் பதவியை இராஜினாமா செய்தேன்.

2004ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் பிரதிச் சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை முதலில் நான் நிராகரித்தபோதிலும், முன்னாள் சபாநாயகர் கெளரவ அநுர பண்டாரநாயக்க அவாகளினதும் அப்போதைய பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் வேண்டுகோளின் பேரில் அப்பதவிக்காக முன்வர இணங்கினேன். அதற்கிணங்க பிரதிச் சபாநாயகா் பதவிக்குப் போட்டியின்றி நியமிக்கப்பட அனைவரினதும் ஒத்துழைப்புடன் இயலுமாயிற்று.


கடந்த நான்கு வருட காலத்தில் இப்பதவியின் பணிகளை தங்களின் கீழ் பாராளுமன்றத்தில் மிகவும் சிக்கலான அரசியல் சூழ்நிலையில் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றியமையைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

இங்கு ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் முன்வைக்கப்பட்ட சவால்களையும் கௌரவத்துடன் நினைவுகூருகின்றேன்.

ஜனநாயகத்தின் பொற்கோயில் என நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பாராளுமன்றம் தொடர்பாக மக்களின் நம்பிக்கையையும் கௌரவத்தையும் வென்றெடுப்பது எம் அனைவரினதும் கடமை எனக் கருத வேண்டும் என எண்ணுகின்றேன்.

முன்னாள் ஆளும் கட்சி பிரதம முதற்கோலாசானின் உயிர் கொடூர பயங்கரவாதத்தினால் பலியெடுக்கப்பட்டதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் நகர அபிவிருத்தி புனித பகுதிகள் அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ தினேஸ்ஷ் குணவர்த்தன அவர்கள் ஆளும் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கௌரவ தினேஸ்ஷ் குணவர்த்தன அவர்கள் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவராக இருப்பது மட்டுமன்றி எனது மூத்த சகோதரராகவும் இருக்கின்றார் என்பது யாரும் அறிந்த விடயமாகும்.

பாராளுமன்றத்தில் தலைமை ஆசனத்தின் பணிகளின் போது முதற்கோலாசானுடன் பல பிரச்சினைகள் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டதைப்போன்று எதிர்காலத்திலும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

இந்நிலைமையில் நீதி வழங்கும்போது அந்தத் தீர்ப்பு நியாயமானதும் சட்டபூர்வமானதுமாக இருக்கவேண்டும் என்பதுடன் அது செயலினால் எடுத்துக்காட்டப்படவேண்டும் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த கோட்பாடாகும்.

பாராளுமன்றத்தில் அக்கிராசனத்தின் கௌரவத்தையும் பாராளுமன்ற மரபுகளையும் பாதுகாக்கும் முக்கியத்துவத்தைக்கொண்டுள்ள அரசியலமைப்பின் மூலம் நியமனம் பெற்ற பிரதி சபாநாயகர் பதவியை அதன்மீதிருந்த பண்புரீதியான கடப்பாடு காரணமாக இராஜிநாமா செய்தேன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இச் சந்தர்ப்பத்தில் இப்பதவியில் கடமையாற்றுகின்றபோது தாங்களும் பிரதம அமைச்சர் அவர்களும் அதிமேதகு சனாதிபதி அவர்களும் எனக்கு எவ்வித நிர்ப்பந்தங்களுமின்றி கடமையாற்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் எனது இராஜிநாமா தொடர்பான விடயங்களை விளக்கியபோது அதை அதிமேதகு சனாதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டதை நான் பெரிதும் மதிக்கின்றேன். இதன்மூலம் அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் அவர்களுக்கு அப்பதவியில் சிரமமின்றி பணியாற்ற வாய்ப்புக் கிட்டும் என நினைக்கின்றேன்.

இறுதியாக உங்களுக்கும் பிரதம அமைச்சர் அவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் செயலாளர் நாயகம் முதல் தோட்ட வேலை செய்யும் தொழிலாளி வரைக்குமான அனைத்து பாராளுமன்ற பணியாளர்களுக்கும் அவர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றியைத் தெரிவிக்கின்ற அதே நேரத்தில் அதைப் பெரிதும் மதிக்கின்றேன். அத்துடன் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிய பிரதி சபாநாயகர் கௌரவ பியங்கர ஜயரத்ன அவர்களுக்கு இப்பதவியில் பணியாற்றுவதற்கான சக்தியும் தைரியமும் அனைவருடைய ஒத்துழைப்பும் கிட்டுமாக என இதயபூர்வமாகப் பிரார்த்திக்கின்றேன்.

மும்மணிகளின் ஆசிர்வாதம் கிட்டுக!



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks