logo

01

E   |   සි   |  

2017-10-03

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கை பாராளுமன்ற ஜனநாயகத்தின் 70வது ஆண்டு நிறைவை நினைவு கூறல்

இலங்கை பாராளுமன்ற ஜனநாயகத்தின் 70வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் முகமாக விசேட பாராளுமன்ற அமர்வொன்று இன்று (ஒக்டோபர் 03) பி.ப. 02.30 மணிக்கு நடத்தப்பட்டது. பிரதான அலுவல்களின் ஆரம்பத்தில் கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கௌரவ பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களினால் பின்வரும் பிரேரணை முன்வைக்கப்பட்டது;

 

“இப்பாராளுமன்றம் இன்று அதன் அமர்வில், ஒரு சுயாதீனப் பாராளுமன்றமாக அதன் முதலாவது கூட்டம் இடம்பெற்று 70 ஆவது ஆண்டு நிறைவைப் பெருமையுடன் அனுஷ்டிப்பதுடன், சனநாயக ஆட்சியில் முறியடிக்கப்படாத்தொரு சாதனையுடன் ஆசியப் பிராந்தியத்தில் உலகளாவிய வாக்குரிமையினால் தெரிவு செய்யப்பட்ட பழமையான பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றம் விளங்குகின்றது எனக் குறிப்பிடுகின்ற அதேவேளை, இப்பாராளுமன்றத்திற்கும் இலங்கை மக்களுக்கும் சனநாயக பாரம்பரியங்கள், கோட்பாடுகள் மற்றும் சட்டவாட்சியை மேலும் வலுப்படுத்தி சுபீட்சமும் அபிவிருத்தியும் பெற்று திகழுமாகவென இப்பாராளுமன்றம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.”

 

அதிமேதகு சனாதிபதியின் உரையை அடுத்து முறையே கௌரவ பிரதம அமைச்சர், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர், கௌரவ சபை முதல்வர், கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான், கௌரவ எதிர்கட்சி முதற்கோலாசான் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற் கட்சித் தலைவர்களினால் உரைகள் ஆற்றப்பட்டன. அதன் பின்னர் கௌரவ சபாநாயகர் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

 

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பிற்கான சங்கத்திற்கு (SAARC) உரித்தான நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் எட்டாவது மாநாட்டிற்கு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள அந்நாடுகளின் பாராளுமன்றங்களின் கௌரவ சபாநாயகர்களும் சபாநாயகரின் கலரியிலிருந்து இந்நிகழ்வை கண்டுகளித்தனர்.

 

“பிரதிநிதிகள் சபை” என அழைக்கப்படும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான முதலாவது பாராளுமன்றம் கொழும்பிலுள்ள ராஜ்ய சபை கட்டிடத்தில் (பழைய பாராளுமன்ற கட்டிடம்) 1947 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் தடவையாக கூடியது. இது 101 உறுப்பினர்களை உள்ளடக்குவதுடன், இதில் 95 பேர் உலகளாவிய வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன் 6 பேர் ஆளுநர்-நாயகத்தினால் பரிந்துரைக்கப்பட்டனர்.

 

பொதுத் தேர்தலானது 1947 ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 20 வரையான 19 நாட்களுக்கு நடைபெற்றது. ஐக்கிய தேசிய கட்சி 42 ஆசனங்களையும், அதன் மூலம் பெரும்பான்மையை பெற்றுக் கொண்டதுடன் நாட்டின் முதலாவது பிரதம அமைச்சராக அதிகௌரவ டி. எஸ். சேனநாயக்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். லங்கா சமசமாஜ கட்சி, போல்செவிக் லெனின்ஸ்ட் கட்சி, கமியுனிஸ்ட் கட்சி, தொழிலாளர் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் பொதுத் தேர்தலின் போது ஆசனங்களை வென்ற ஏனைய அரசியற் கட்சிகளாகும். சுயாதீன அபேட்சகர்கள் இருபது பேரும் தெரிவு செய்யப்பட்டனர். பலங்கொட முதலாவது உறுப்பினர், கௌரவ (சேர்) அலெக்ஸாண்டர் பிரன்சிஸ் மொலமுரே, அவர்கள் சபாநாயகராகவும் தெரிவு செய்யப்பட்டார். ஆர். சென்ட் எல். பீ. தெரணியகல அவர்கள் (சி.பி.ஈ.) பிரதிநிதிகள் சபையின் செயலாளராவார்.

 

செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை எனும் சபைகள் இரண்டைக் கொண்ட இலங்கையின் (அன்றை சிலோன்) முதல் பாராளுமன்றம் இரட்டை வாரியமாக இருந்தது. அது நிறுவப்பட்டது சோல்பரி ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் படி மற்றும் சிலோன் (அரசியலமைப்பு) சபை கட்டளையின் அடிப்படையிலுமாகும். 1931 இல் உருவாக்கப்பட்ட சிலோன் ராஜ்ய சபையின் மூலம் பிரதியீடு செய்யப்பட்டது. செனட் சபை 1971 இல் இல்லாதொழிக்கப்பட்டதுடன், 1972 இல் குடியரசு அரசியலமைப்பு செயற்படத் தொடங்கியதுடன் பிரதிநிதிகள் சபைக்கு பதிலாக தேசிய அரசுப் பேரவை அமைக்கப்பட்டது. 1978 செப்டம்பர் 7ஆம் திகதி இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதுடன் இரண்டாவது தேசிய அரசுப் பேரவைக்கு பதிலாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

தற்போதைய பாராளுமன்றம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றமாவதுடன், ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் பதினேழாவதாகும். 1947 முதல் உறுப்பினர்கள் 14 பேர் பிரதம அமைச்சர் பதவியை வகித்துள்ளதுடன், 18 பேர் பாராளுமன்ற சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று வரை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் பதவியில் (இதற்கு முதல் சபை செயலாளர் என அழைக்கப்பட்ட) ஏழு பேர் சேவையாற்றியுள்ளனர்.

 

தினத்தின் சபை அமர்வை பார்க்க

 

 

1947 ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதலாவது கூட்டம்

1 2

 

 

 

3 4

5 6        7

 



தொடர்புடைய செய்திகள்

2026-08-14

பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் 2026-ஆம் ஆண்டின் சிறந்த இணையதளத்திற்கான வெள்ளி விருதை வென்றது

அரச துறையில் சிறந்த இணையதளமாகவும்  பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தங்க விருது வென்றதுஇலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.parliament.lk, அண்மையில் நடைபெற்ற "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழாவில் 'சிறந்த இணையத்தளத்திற்கான' (Best Website Overall) ஒட்டுமொத்தப் பிரிவில் வெள்ளி விருதை (Silver Award) வென்றுள்ளது.அத்துடன், 'சிறந்த அரச இணையத்தளம்' (Best Government Website) பிரிவில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தங்க விருதை (Gold Award) வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.LK டொமைன் பதிவகத்தினால் (LK Domain Registry) ஏற்பாடு செய்யப்பட்ட "BestWeb.lk 2026" விருது வழங்கும் விழா, 2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் அமைந்துள்ள 'மொனார்க் இம்பீரியல்' (Monarch Imperial) மண்டபத்தில் நடைபெற்றது.இவ்வாண்டு 24 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 350க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் போட்டியில் பங்கேற்றன. தொழில்நுட்ப அமுலாக்கம், செயல்திறன், வடிவமைப்பு, உள்ளடக்கம், பாதுகாப்பு மற்றும் ஏனைய மேலதிக அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இணையத்தளங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இதற்கு முன்னரும் BestWeb.lk போட்டியில் பல சந்தர்ப்பங்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. நவீனமயப்படுத்தப்பட்ட புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு வருட இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு மீண்டும் இப்போட்டியில் பாராளுமன்ற இணையத்தளம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.இந்த விருது விழாவில் பல முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இணையத்தளங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதமரின் செயலாளர் திரு. ஜீ. பிரதீப் சபுதந்திரி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.இந்த அங்கீகாரம், பாராளுமன்றம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அணுகக்கூடிய, நம்பகமான மற்றும் பயனருக்கு எளிதான வகையில் பாராளுமன்றத் தகவல்களை வழங்குவதற்கும், தனது டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்துவதற்கும் உள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுகின்றது.


2026-08-11

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரமான ஓகஸ்ட் 18ஆம் திகதி முதுல் 21ஆம் திகதி வரைக்கான காலப்பகுதிக்குரிய பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2496/38 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலினால் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.பி.ப.   5.00     இலங்கை தேசிய புகைப்படக்கலைச்சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து சட்டவாக்க குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.இதனைத் தொடர்ந்து பி.ப.   5.00 மணி முதல் பி.ப.   5.30  மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 19ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நிதிச்சட்டத்தின் கீழான தீர்மானம் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. (இப்பிரேரணை 2026.05.07 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள பாராளுமன்றத்தின் 4 ஆம் இலக்க ஒழுங்குப்              புத்தகத்திற்கான 4 ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது).இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் 20ஆம் திகதி  வியாழக்கிழமை  மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பெண்களையும். இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்சட்டமூலம்) இரண்டாவது மதிப்பீட்டுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 21ஆம் திகதி   வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


2026-08-11

வாருங்கள்.... காணுங்கள்.... அறிந்துகொள்ளுங்கள்... இது உங்கள் பாராளுமன்றம்

நாளைய தலைவர்களாக உருவாகவிருக்கும் சின்னஞ்சிறு மலர்கள் பாராளுமன்ற வளாகத்தில் அடிக்கடி காணக்கூடிய மற்றுமொரு அழகிய காட்சியாகும்! தியவன்னாவின் அழகை ரசித்தவாறு பாராளுமன்றத்தை நேரில் பார்வையிட்டு, புதியதோர் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கிறது.இலங்கையின் நாலாபுறங்களிலிருந்தும் ஆரம்பப் பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவானோர் தினமும் பாராளுமன்ற வளாகத்தை நேரில் பார்வையிடுவதற்காக வருகை தருகின்றனர்.புத்தகங்கள் மூலம் பாராளுமன்ற முறைமை தொடர்பில் பெற்றுக்கொள்ளும் அறிவை, பாராளுமன்றத்திலேயே நேரடியாக அவர்கள் கண்டறிந்துகொள்ள இதனமூலம் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டுகிறது.பாராளுமன்ற சபா மண்டபம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைப் பார்வையிடுவதற்கு அப்பால், ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் அவர்கள் கற்கும் பாடங்களுக்கும் பொருத்தமான வகையில், பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடு உள்ளிட்ட பணிகள் தொடர்பில் புரிந்துணர்வை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமன்றி, பாராளுமன்றத்தைச் சூழவுள்ள இயற்கை அழகையும், எமது பாராளுமன்றத்தின் சிறப்புமிக்க கட்டடக்கலை மற்றும் கலைநயமிக்க பெறுமதிகள் பற்றிய புரிந்துணர்வையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.வாருங்கள்.... காணுங்கள்... அறிந்துகொள்ளுங்கள்... இது உங்கள் பாராளுமன்றம்!புகைப்படம் –கிட்டி கோவ் (Kiddie Cove) முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் மற்றும் ஆசிரியர்கள் குழுவினர் நேற்று (10) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.


2026-08-07

பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை நிறுவுவதற்கு மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் ஆதரவு

கௌரவ சபாநாயகருக்கும் மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் சந்திப்புசபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பாராளுமன்றத்தின் பத்தாவது திணைக்களமாக மாற்றுவதற்குத் திட்டம்இலங்கை பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை நிறுவுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கும், சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் (Max Planck Foundation for International Peace and the Rule of Law) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கைப் பாராளுமன்றத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளராக ஆதரவளிக்கும் மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளைளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் நிர்வாகப் பணிப்பாளர் யோஹன்னஸ் க்ரூஸ்மார்க் (Johannes Krusemark), மூத்த ஆராய்ச்சி அதிகாரி ஹெய்லி நிக்கோல் எவன்ஸ் (Hailey Nicole Evans) மற்றும் சட்ட ஆலோசகர் ருவினி பெரேரா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.இதன்போது, முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்திற்காகத் தயாரிக்கப்பட்ட திட்ட முன்மொழிவு எனக்கு சமர்ப்பிக்கப்பட்டது.இந்த மையமானது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை மறுசீரமைத்து, இலங்கை பாராளுமன்றத்தின் பத்தாவது திணைக்களமாக நிறுவ எதிர்பார்ப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டார்.இந்த மையத்தின் மூலம்:•    உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் கொள்கை வகுப்பாளர்களாகப் பயிற்றுவித்தல்,•    சட்ட ஆக்கச் செயற்பாடுகளுக்கு அவசியமான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வாய்ப்புகளை விரிவாக்குதல்,•    நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று, அவற்றின் பயனுள்ள தன்மையை மீண்டும் மதிப்பீடு செய்தல் (Post-Legislative Scrutiny),•    ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்களிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல்   ஆகிய நோக்கங்களை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.மேலும், இந்தியாவின் மக்களவை (Lok Sabha) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) பாராளுமன்றத்தில் செயற்படுத்தப்படும் பாராளுமன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு இத்திட்ட முன்மொழிவை வலுப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.இந்த முக்கியமான தேசியப் பணிக்கு வளவாளராக ஆதரவளிக்க ஒப்புக்கொண்ட மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளைக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தின் சட்ட சேவைகள் பணிப்பாளர் திரு. ஜயலத் பெரேரா இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், குழுவால் தயாரிக்கப்பட்டு வரும் திட்ட முன்மொழிவு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  இச்செயல்முறையில் மாக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளும் பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், குறித்த அறக்கட்டளை நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்தார். இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பாராளுமன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் காந்தி பீரிஸ் மற்றும் பாராளுமன்றத்தின் நிதிப் பணிப்பாளர் சரத் குமார ஆகியோர் காணப்படுகின்றனர். இச்சந்திப்பில் கௌரவ சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜனக மகேஷ் அத்தபத்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks