பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-08-05
செய்தி வகைகள் : செய்திகள்
பாராளுமன்ற பணியாளர்களின் குழுக்களுக்கு இடையிலான ‘பார்லிமென்ட் ப்ரீமியர் லீக் 2026’ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஆண்கண் பிரிவில் கயான் பெரேரா தலைமையிலான ‘றோயல் றிசீவர்ஸ்’ அணி வெற்றிபெற்றதுடன், பெண்கள் பிரிவில் கீதானி விதானபத்திரண தலைமையிலான ‘கோல்டன் ஃப்ளேம்ஸ்’ அணி மூன்றாவது தடவையும் சம்பியன் பட்டத்தை வென்றது.
ஆண்கள் பிரிவில் பிரதீப் ரணதுங்க தலைமையிலான ‘தியவன்னா ரைடர்ஸ்’ அணியும், பெண்கள் பிரிவில் மினோலி மதுஷிலா தலைமையிலான ‘ஒன் டு ஒன் கேர்ள்ஸ்’ அணியும் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டன.
பாராளுமன்ற விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த மென்பந்து கிரிக்கெட் சபோட்டி கோட்டே ஆனந்த சாஸ்த்ராலயா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ பாராளுமன்ற பிரதி குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
போட்டித் தொடரில் வெற்றிபெற்ற அணிகளுக்கும் திறமையை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளுக்கும் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பிரதி குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. சணச நிறுவனத்தின் நிறுவுநரும் தலைவருமான கலாநிதி பி.ஏ. கிறிவந்தெனிய, சணச சங்கங்களின் அபிவிருத்திப் பிரிவின் தலைவர் துசித் வீரவர்தன, பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன மற்றும் உணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ராஜ் எதிரிசிங்க உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
பார்ளிமென்ட் ப்ரீமியர் லீக் 2026 போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற ‘றோயல் றிசீவர்ஸ்’ அணியின் சுரங்க விக்ரமஆரச்சி இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதே அணியைச் சேர்ந்த பவந்த ஷாமிக் போட்டித் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும், ஜனித் ஆரியதிலக போட்டித் தொடரின் ஆட்டநாயகனாகவும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
அதேவேளை, போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற தியவன்னா ரைடர்ஸ் அணியின் வீரரான ஏ.ஜி. சுரேஷ் சதுரங்க குமாரஜீவ போட்டித் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும், முதன்முறையாக வழங்கப்பட்ட போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதை ‘கோல்டன் ஃப்ளேம்ஸ்’ அணியின் வீராங்கனை ருவங்கா கமகே பெற்றுக்கொண்டார்.
சம்பியன் பட்டத்தை வென்ற ‘றோயல் றிசீவர்ஸ்’ அணியில் கயான் பெரேரா, தர்ஷன துசித, அமல் சேனாதீர, சாமர வசந்த, மொஹான் டிலூஷ், பவந்த ஷாமிக், கித்மின் மதுஷங்க, ஜனித் ஜுஷான், சஞ்சய நுவன், மாலிந்து பீலகம, சுரங்க விக்ரமஆரச்சி, சதுஷ்க மதுஷான், கேஷர கணேஷ், ஹன்சக மதுஷான் மற்றும் சசங்க மதுஷான் ஆகியோர் பங்கேற்றனர்.
மகளிர் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்ற ‘‘கோல்டன் ஃப்ளேம்ஸ்’அணியில் கீதானி விதானபதிரண, ருவங்கா கமகே, எஷானி ஜயவீர, ரிஷ்மியா நூட்டான், நிரோஷணி விக்ரமசிங்க, தமரா குமாரி, காயத்ரி சில்வா, கௌஷல்யா திசாநாயக்க, லுக்ஷானி லத்துசிங்க, நிலூஷி ஜயசூரிய, நிலூஷி பெர்னாண்டோ, காயத்ரி கல்லேகொட, இந்திகா தேவகே, நிசன்சலா பெரேரா மற்றும் பி.ஜி.கே.என். மிஹிரி ஆகியோர் பங்கேற்றனர்.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks