E   |   සි   |  

2025-12-30

செய்தி வகைகள் : செய்திகள் 

2025ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்த விபரங்கள் வருமாறு,




சட்டத்தின் பெயர்நிறைவேற்றப்பட்ட திகதிசான்றுரைக்கப்பட்ட திகதிசட்டத்தின் இலக்கம்
1உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்17.02.202517.02.202501/2025
2உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்20.03.202520.03.202502/2025
3ஒதுக்கீட்டுச் சட்டம்21.03.202521.03.202503/2025
4சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டம்09.04.202511.04.202504/2025
5குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம்08.04.202530.04.202505/2025
6வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டம்23.05.202523.05.202506/2025
7குற்றவியல்  நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம்04.06.202518.06.202507/2025
8தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டம்05.06.202519.06.202508/2025
9வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம்22.07.202523.07.202509/2025
10வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம்22.07.202523.07.202510/2025
11வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டம்22.07.202523.07.202511/2025
12கம்பெனிகள் (திருத்தச்) சட்டம்24.07.202504.08.202512/2025
13நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டம்07.08.202515.08.202513/2025
14இலங்கை மின்சார (திருத்தச்) சட்டம்06.08.202518.08.202514/2025
15சமுர்த்தி (திருத்தச்) சட்டம்20.08.202522.08.202515/2025
16இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டம் 20.08.202522.08.202516/2025
17பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்19.08.202503.09.202517/2025
18சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டம்10.09.202510.09.202518/2025
19தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டம்11.09.202522.09.202519/2025
20தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவக சட்டம்23.09.202507.10.202520/2025
21விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டம்07.10.202507.10.202521/2025
22தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் 21.10.202530.10.202522/2025
23ஒதுக்கீட்டுச் சட்டம்05.12.202505.12.202523/2025
24சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்தச்) சட்டம்05.12.202517.12.202524/2025
25பந்தய, சூதாட்ட விதிப்பனவு
(திருத்தச்) சட்டம்
05.12.202517.12.202525/2025
26செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டம்05.12.202517.12.202526/2025




தொடர்புடைய செய்திகள்

2026-06-11

இலங்கைப் பாராளுமன்ற தூதுக் குழு சீனாவிற்கான உத்தியோகபூர்வ செயலமர்வு நிகழ்ச்சித்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்தது

சீன மக்கள் குடியரசில் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற இலங்கைப் பாராளுமன்ற தூதுக் குழு, அதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து 2026 ஜூன் 05 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. கௌரவ வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்களது தலைமையிலான இந்தப் பாராளுமன்ற  தூதுக் குழு, 2026 மே 26 முதல் ஜூன் 04 வரை சீனாவின் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு  நிலையத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றது.  இந்த விஜயத்தின் போது, இக்குழு சீனாவின் ஆளுகைக் கட்டமைப்பு, அபிவிருத்தி மூலோபாயம், சனநாயக ஆலோசனைப் பொறிமுறைகள் மற்றும் தேசியக் கொள்கை வழிகாட்டல் முதலிய தலைப்புகளில் சீனாவின் சிரேஷ்ட கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரினால் நடத்தப்பட்ட அமர்வுகளில் பங்கேற்றது. இக்குழு தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) மாநாட்டு மண்டபம் மற்றும் மக்கள் மாபெரும் மண்டபம் (Great Hall of the People) உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்களுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டது. மேலும், சர்வதேச தேயிலைத் தினத்தை முன்னிட்டு 2026 மே 29 ஆம் திகதி பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்விலும் இக்குழு கலந்துகொண்டது. இந்நிகழ்வானது இலங்கையின் வளமான தேயிலை பாரம்பரியத்தையும், கலாசார மற்றும் பொருளாதார உறவுகளுக்கான அதன் பங்களிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது. இந்நிகழ்ச்சித் திட்டம் ஷென்சென் (Shenzhen) மற்றும் பின்னர் குவாங்சோ (Guangzhou) ஆகிய நகரங்களிலும் தொடர்ந்ததுடன் அங்கு இக்குழு ஸ்மார்ட் உட்கட்டமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம், தகவல் தொடர்பாடல்கள், விவசாயம் மற்றும் புதிய சக்திக் கைத்தொழில்கள் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களையும் அபிவிருத்திக் கருத்திட்டங்களையும் பார்வையிட்டது. இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திர உறவு, நிறுவன ரீதியான பரிமாற்றம் மற்றும் அறிவுப் பகிர்வு என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக இந்த செயலமர்வு அமைந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வருகின்ற நட்புறவுகளையும் மேலும் வலுப்படுத்தியது.


2026-06-10

இலங்கையின் தற்போதைய நிதி மற்றும் நாணயமாற்று விகித கொள்கைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் உள்ளிட்ட அதிகாரிகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தினர்

நாணயக் கொள்கை, நாணயாற்று விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று (ஜுன் 10) நடைபெற்றது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் முறைமை, நாணயமாற்று விகிதத்தின் போக்கு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் பராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் கருத்துக்களுக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகள் பதில்களை வழங்கினர்.இந்த நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-09

“பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)”  எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஜுன் 09) பாராளுமன்றத்தில் அறிவித்தார். உயர் நீதிமன்றம் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றலாம் என்று தீர்மானித்துள்ளது. எனினும்  வாசகம்  14 [முன்மொழியப்பட்ட பிரிவு  12 அ(ஆ)] மற்றும் வாசகம்  18 [முன்மொழியப்பட்ட பிரிவுகள் 17அ, 17ஆ மற்றும் 17இ] ஆம் வாசகங்கள்    மட்டும் விதிவிலக்காகும். இந்த வாசகங்கள்  பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். நீதிமன்றம் பரிந்துரைத்தபடி திருத்தப்பட்டால், அவற்றையும் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் அறிவித்தார்.உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய (09) கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென்றும் சபாநாயகர் கட்டளையிட்டார்.


2026-06-08

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்திற்குப் புதிய பதவி தாங்குனர்கள் தெரிவு

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை 02 இல் அண்மையில் நடைபெற்றது. இதில் 2026 ஆம் ஆண்டிற்கான பதவி தாங்குனர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.இதற்கமைய பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக திரு. பி.எம். ரஸீல்  அவர்களும், உப தலைவராக திரு. எம்.ஐ.எம். பாஸி அவர்களும், செயலாளராக திரு. சி. மணிமாறன் அவர்களும், பொருளாளராக திரு. எம்.ரீ. செய்னுர் ரிஃபா அவர்களும், உதவிச் செயலாளராக செல்வி டி. துலாங்கனி அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக  திரு. எம். மயூரேஷன்  திருமதி. ஏ.ஏ.எஸ். சபாயா  ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பதவி தாங்குனர்கள், பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி திரு. சீ.ஜே. கருணாரத்ன மற்றும் பிரதிப் பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான திரு. ஏ.ஜி.எம். பிக்ரி, திரு. அ. சரவணபவானந்தன்,  திருமதி என்.பி.சி.ஜே. நிஸ்ஸங்க ஆகியோருடன்  குழுப் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks