E   |   සි   |  

2025-12-02

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பல அரச நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

பல அரச நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர அவர்களின் தலைமையில் 2025.11.21ஆம் திகதி இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன .

அதற்கமைய நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள பின்வரும் நிறுவனங்களின் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன:

1.    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்
2.    தேசிய திட்டமிடல் திணைக்களம்
3.    அரச தொழில் முயற்சிகள் திணைக்களம்
4.    மதிப்பீட்டுத் திணைக்களம்
5.    இலங்கை சுங்கம்
6.    வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
7.    அபிவிருத்தி நிதித் திணைக்களம்
8.    தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
9.    அரச நிதிசார் கொள்கைத் திணைக்களம்
10.    அரச நிதித் திணைக்களம்

இந்தத் திணைக்களங்களின் பணிகள், எதிர்காலத் திட்டங்கள், தேவைகள் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. 

இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆரச்சி மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-11-28

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு, எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது கைவிடப்பட்ட 11 திட்டங்கள் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் அவதானம்

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் குறித்து குழுவின் கவனம்திணைக்களத்தினால் தற்பொழுது பயன்படுத்தப்படும் மற்றும் தினணக்களத்தின் பொறுப்பில் இல்லாத வாகனங்கள் குறித்து அறிக்கை கோரப்பட்டதுகணக்குப் பிரிவில் காணப்படும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்தும் குழு கவனம் செலுத்தியதுநீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு, எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது கைவிடப்பட்ட 11 திட்டங்கள் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 55,078 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டு 4,047.43 மில்லியன் ரூபா செலவில் 11 அபிவிருத்தித் திட்டங்களில் சில கைவிடப்பட்டும், சில தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இவற்றில் உமா ஓயா கீழ் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்டம், கீழ் மல்வத்து ஓயா அபிவிருத்தித் திட்டம் மற்றும் யான் ஓயா நீர்த்தேக்க அபிவிருத்தித் திட்டங்களும் உள்ளடங்குவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.இவ்வாறான நிலையில், நாட்டிற்கு முக்கியமான திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக முடிக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது. தேவையான முன்னுரிமையை அடையாளம் காணாமல் சில திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க நிதி குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குழு மேலும் வலியுறுத்தியது.அத்துடன், நீர்ப்பாசனக் கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசனக் குளங்களுக்கான வழிகள் தடுக்கப்பட்டிருந்தால் அல்லது அவற்றைத் தடுக்கும் வகையில் சட்டவிரோதமான கட்டடங்கள் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இது பற்றி பிறிதொரு தினத்தில் விரிவாகக் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் குழு சுட்டிக்காட்டியது.திணைக்களத்திற்குச் சொந்தமான தற்பொழுது பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் திணைக்களத்தின் பொறப்பில் இல்லாத வாகனங்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதியாகும்போது 2004 வாகனங்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், திணைக்களத்தின் வாகனப் பதிவுகளின்படி கிடைக்கக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கை 1560 என்று குழு சுட்டிக்காட்டியது. இதற்கமைய, 464 வாகனங்கள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லையென்பதைக் குறிப்பிட்ட குழு, இது தொடர்பான அனைத்துத் தரவுகளையும் கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.கணக்குப் பிரிவுப் பணியாளர்களுக்குக் காணப்படும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியதுடன், இந்த நியமனங்களுக்கான கோரிக்கையை முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பதுடன், அதன் பிரதியொன்றைத் தமக்கு அனுப்புமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, சுகத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, (வைத்தியர்) காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத், ஓஷானி உமங்க, லால் பிரேமநாத் மற்றும் சுனில் ரத்னசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks