பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-11-07
செய்தி வகைகள் : செய்திகள்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (நவ. 07) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சம்பிரதாய பூர்வமாக படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 5.50 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.
புதிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமான இது சுதந்திர இலங்கையின் 80வது வரவுசெலவுத்திட்டமாக வரலாற்றில் பதிவாகிறது. வெளிநாட்டுத் தூதுவர்கள், ஆளுநர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.
2026-02-19
இரு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மற்றும் கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றை 17.02.2026ஆம் திகதி சான்றுரைப் படுத்தியிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (பெப். 18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.1972ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுபுநர்களுக்கு, கலன் செயற்படுத்ததப்படாப் பொதுக் காவுனர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்களுக்கு உரிமைமளித்தல் சட்டம் இதன்மூலம் திருத்தப்படுகின்றது.இதற்கு அமைய, இதுவரை விசேட துறையாகக் கருதப்படும் கொள்கலம் செயற்படுத்துநர்கள் அச்சட்டவாக்கத்தின் ஏற்பாாடுகளின் ஏற்புடமையிலிருந்து நீக்கப்பட்டு, கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படுவர். எஞ்சிய கப்பல் சேவை வழங்குனர்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் ஒழுங்குறுத்தப்படுவர்.கொள்கலன் செயற்படுத்துனர்களினதும் தற்போதைய உரிமங்களும், பரிசீலிக்கப்படும் விண்ணப்பங்களும் தானாகவே புதிய கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படுவதுடன், இத்துறையின் செயற்பாடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் தொடர்ச்சி உறுதிசெய்யப்படும்.இதற்கு அமைய 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 05ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது. அத்துடன், 05.02.2026 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம், இலங்கையில் கொள்கலன் தொழிற்படுத்துநர்களின் வணிகங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை வழங்குகின்றது. அவ்வாறான வணிகளில் ஈடுபடும் எந்தவொரு நபரும் வணிக கப்பல் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் செல்லுபடியாகும் உரிமைப்பத்திரத்தை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கின்றது.இது 2026ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.பாராளுமன்ற விசேட குழுவிற்கு (கலாநிதி) உபாலி பன்னிலகே நியமனம்கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுர கருணாதிலக விலகியமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பாராளுமன்றத்தின் 109ஆவது நிலையியற் கட்டளைக்கு அமைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
2026-02-17
சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (பெப். 17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் பதிவாகின.இதனைத் தொடர்ந்து குழு நிலையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோர் சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவுக்கு திருத்தங்களை முன்வைத்தனர். அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டதுடன், இதன்போது சாமர சம்பத் அவர்கள் தனது திருத்தத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைய குறித்த சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 152 வாக்குகளும், முன்மொழியப்பட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவாக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சட்டமூலத்தின் 4வது பிரிவுக்கு திருத்தம் முன்வைக்கப்பட்டதுடன், இதனை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரினால் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டின் பின்னர் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.இந்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2026 ஜனவரி 07ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இந்தச் சட்டமூலத்திற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.இச்சட்டத்தின் ஊடாக தேசிய அரசுப் பேரவையின் 1977ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் நீங்குகின்றது. இதற்கு அமைய சட்டத்தின் 3வது பிரிவின் நியதிகளின் படி ஓய்வூதியமொன்றறைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவரானவரும் மற்றும் இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னதாக ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்கின்றவருமான எவரேனும் ஆளுக்கு இச்சட்டம் தொடங்கும் தேதியன்றும் அதன் பின்னரும் அத்தகைய ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
2026-02-12
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி நகரில் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 7வது ஆசிய பிராந்திய மாநாடு மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆசிய, தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களின் இணைந்த இரண்டாவது மாநாட்டில் கௌரவ பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர். இது “பாராளுமன்றங்களின் எதிர்காலம் : நம்பிக்கை, உள்ளடக்கம், புத்தாக்கம் மற்றும் சமாதானம் என்பவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மறுவரையறை செய்தல்” என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சிந்து மாநில சட்டமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இலங்கைப் பாராளுமன்றத் தூதுக் குழுவில் கௌரவ வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலகட, சுஜீவ திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் அங்கம் வகித்தனர். பெப்ரவரி 03ஆம் திகதி இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பாகிஸ்தானின் தேசிய பேரவையின் கௌரவ சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் பங்கேற்றார். இந்த மாநாடு பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் இருந்து பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய சட்டமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைதாங்கும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது.“சமாதானம் மற்றும் ஜனநாய நம்பிக்கை : நல்லிணக்கத்திற்கான இயந்திரமாகப் பாராளுமன்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், சமீபத்திய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களைத் தொடர்ந்து ஜனநாயக நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பிய இலங்கையின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நவீன பாராளுமன்றங்கள் மக்களின் குரல்களை செவிமடுக்கும், உரையாடல்களை ஊக்குவிக்கும், வெளிப்படைத் தன்மையின் ஊடாகப் பொறுப்புக் கூறலைப் பலப்படுத்தும், குழுக்களை மேற்பார்வை செய்யும், ஊழலுக்கு எதிரான பொறிமுறை, இளைஞயோரின் பங்களிப்பு போன்றவற்றை வலுப்படுத்தும் நிறுவனங்களாக செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அத்துடன், நீடித்த சமாதானம் மற்றும் ஜனநாயகத்தின் நிலைத்தன்மைக்கு அத்தியாவசியமான அடித்தளங்களாக நல்லிணக்கமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.“பாராளுமன்றக் கல்வி : நாளாந்த வாழ்க்கையில் ஜனநாயகக் கொள்கைகளை ஆழமாகப் பதியச்செய்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றுமொரு அமர்வில் இலங்கையின் கட்டமைக்கப்பட்ட பிரஜைகள் கல்வி அமைப்பு, மாணவர் பாராளுமன்றங்கள், இளைஞர் பாராளுமன்ற முயற்சிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் நடவடிக்கைகள் குறித்து பிரதி சபாநாயகர் விளக்கமளித்தார். பாடசாலை மட்டம் முதல் பெரியோர் வரையில் நாட்டுப் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தின் ஆட்சி மற்றும் பாராளுமன்றப் பொறுப்புக்கூறல் குறித்து கல்வி வழங்குவது மிகவும் முக்கியம்வாய்ந்தது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.“சமாதானம் நிறைந்த மற்றும் ஒற்றுமையான சமூகங்களின் முன்னணியாகப் பாராளுமன்றங்கள் : போலியான செய்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல்களின் அதிகரிப்பு”, “உய்வுக்கான சட்டமியற்றல் : காலநிலைகளுக்கு முகங்கொடுத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் குரல்கள்”, “பாலினம், தொழில்நுட்பம் மற்றும் நம்பிக்கை : ஒன்லைன் வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் துறையின் கையாளல்” என்ற தலைப்புக்களில் இடம்பெற்ற அமர்வுகளில் கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் அகலக்கட, சுஜீவ திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் கலந்துகொண்டு, பங்களித்தனர்.இறுதிநாள் அமர்வில் நன்றியுரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், ஆசிய பிராந்தியத்தின் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியம், பொதுநலவாய ஒன்றியத்தின் சிந்து கிளை, பாகிஸ்தான் தேசிய பேரவை போன்றவை வழங்கிய சிறப்பான விருந்தோம்பல் மற்றும் ஏற்பாடுகளுக்கு நன்றி பாராட்டினார். இந்த மாநாடு கலந்துரையாடல்களுக்கும், கற்றல்களுக்கும் மதிப்பு மிக்க மேடையாக அமைந்தது என்று குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தின் மதிப்புக்களைப் பாதுகாப்பதில் வலுவான பாராளுமன்றங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன், கராச்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பொதுநலவாய நாடுகளின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் முன்கொண்டு செல்லப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.ஜனநாயக ஆட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாதிக்கம், பாராளுமன்ற பொறுப்புக் கூறல், உள்ளடங்கலான நிர்வாகம், பொறுப்புவாய்ந்த புத்தாக்கம், நீடித்த சமாதானம் ஆகியவற்றிற்கான தங்களின் கூட்டு அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில் கராச்சி பிரகடனத்தை அனைத்துப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர். பொதுமக்கள் நம்பிக்கையின் சரிவு, தவறான மற்றும் வழுவான தகவல்களின் பரவல், சமூக ஒதுக்கல், காலநிலை பாதிப்புக்குட்படும் நிலை மற்றும் அதிவேக தொழில்நுட்ப மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்காக ஒத்துழைப்பும் பாராளுமன்ற இராஜதந்திர முயற்சிகளும் அவசியம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். இதனை முன்னெடுக்க வெளிப்படைத்தன்மை, பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் முன்னோக்குப் பார்வை கொண்ட பாராளுமன்றங்கள் இன்றியமையாதவை என்ற பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதாக இம்மாநாடு முடிவுக்கு வந்தது.
2026-02-10
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.அரசியலமைப்பின் பிரிவு 153அ இன் கீழ், கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் பின்வரும் நியமனங்களுக்கு பொருத்தமான நபர்களை அரசியலமைப்பு பேரவை, கௌரவ சனாதிபதிக்கு பரிந்துரைக்கும்: i. பிரதி கணக்காய்வாளர் தலைமையதிபதியாக அல்லது அதற்கு மேற்பட்ட பதவி வகித்த கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் ஒய்வு பெற்ற இரண்டு அலுவலர்கள்;ii. உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதி மன்றம் அல்லது இலங்கை மேல் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியொருவர்; அத்துடன் iii. இலங்கை நிருவாக சேவையின் ஓய்வுபெற்ற வகுப்பு I அலுவலர்.இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள்;அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம்அரசியலமைப்புப் பேரவை அலுவலகம்இலங்கைப் பாராளுமன்றம்ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேஎனும் முகவரிக்கு, 2026 பெப்ரவரி 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ எனக் குறிப்பிட வேண்டும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks