பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-11-29
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக அமுலில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் குறித்த சட்டத்தை தற்போதைய சமூக நிலைமைக்கு ஏற்றவாறு திருத்துவதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட உப குழுவொன்று அமைக்கப்படவிருப்பதாக பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற (நவ. 27) பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த நிறுவனங்களில் பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுவது பாரிய பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் சிறந்த திறனைக் கொண்ட அதிகாரி ஒருவரை செயலாளர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களில் ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் நிதி ஒதுக்கீடு செய்து பயிற்சி வாய்ப்புக்களைப் பெற்ற அதிகாரிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்குள் மாத்திரம் இடம்மாற்றம் செய்வதற்குக் கேகாலை மாவட்ட உறுப்பினர் சுதத் மஞ்சுள முன்வைத்த முன்மொழிவு மற்றும் தற்பொழுது இடம்பெற்றுவரும் வேகமான நகரமயமாக்கலின் மத்தியில் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெவ்வேறு மாற்றங்கள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் இந்த உபகுழு அமைக்கப்படவுள்ளது.
தற்போது மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கும் உள்ளூராட்சி மன்றங்களின் அன்றாட செயற்பாடுகளை மிகவும் ஜனரஞ்சகமான முறையில் நிறைவேற்றுவது தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இயற்கை அனர்த்தங்கள் மற்றும் டெங்கு போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதில் சில உள்ளுராட்சி மன்றங்கள் மெத்தனப் போக்குடன் செயற்படுவதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனை குறைப்பதற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்தின் போது, பிரதேசங்களில் அதிகபட்ச சேவைக் காலத்தை 6 வருடங்களாகவும், மாவட்டத்தில் அதிகபட்ச சேவைக் காலத்தை 10 வருடங்களாகவும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக ஒரே இடத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களை இனத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் முன்வைத்த யோசனையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் பிரதமர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
மாகாண சபைகளில் நீண்டகாலமாக கடமையாற்றும் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படாமல் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இணையாக இடமாற்ற நடவடிக்கையில் உள்வாங்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
2024ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் அங்கீகாரத்துடன் செலவிடப்பட வேண்டுமென பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமரின் வவுனியா விஜயத்தின் பலனாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்காக பிரதமருக்கு விசேட நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் தெரிவித்தார்.
பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


