logo

02

E   |   සි   |  

2023-07-18

செய்தி வகைகள் : செய்திகள் 

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் மதிப்பீட்டு செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் செயற்பாடுகள் இந்நாட்டின் அரச சேவையை மேம்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட குழுவினருக்கு  பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

2019- 2020 ஆம் ஆண்டுகளில் செயற்திறனை வெளிப்படுத்தியிருந்த 65 அரச நிறுவனங்களுக்கு தங்க மற்றும் வௌ்ளி விருதுகளை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன மற்றும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இன்று (18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

பசுமைப் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் நவீனமயப்படுத்தல் என்பவற்றுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளை பழமையான முறையின் கீழ் முன்னெடுக்க முடியாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து அரசாங்க நிறுவனங்களும் ஒரு நோக்கத்தின் கீழ் ஒரே திட்டமிடலுடனான பிரிவுகளாக ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரச செலவீனங்களை கட்டுப்படுத்தல், ஒவ்வொரு ரூபாவிற்கும் உச்ச பெறுமதியை பெற்றுக்கொடுத்தல் , வருமானத்தை அதிகரித்துக்கொள்ளல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்திக் கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகளின் வாயிலாக நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டியது அவசியம் என்றும், அதற்கான வலுவான நிர்வாகக் கட்டமைப்பொன்று நாட்டுக்கு அவசியப்படுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்துக் கொள்வதற்காக வலயத்தின் பரந்த பொருளாதார கூட்டிணைவான RCEP இல் இணைவது மற்றும் இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

இங்கு உரையாற்றிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண, விருதுகளைப் பெற்றுக்கொண்ட அரசாங்க நிறுவனங்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், 2015ஆம் ஆண்டில் இருந்ததைவிட அரசாங்க நிறுவனங்கள் 98 வீதம் முன்னேற்றம் கண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பொதுக் கணக்குகளைப் பராமரிக்கும் முறைமை, நிதிக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் என்பன பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் செயல்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட முறையில் வருடாந்தம் மதிப்பீடு செய்யப்படுவதுடன், அதற்கமைய, கணக்காய்வாளர் நாயகத்தினால் பகுப்பாய்வு மற்றும் விசாரணை செய்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைய சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய அரச நிறுவனங்களுக்கு இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய, 833 அரச நிறுவனங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 2019 ஆம் ஆண்டில் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிறுவனங்களுக்கு தங்க விருதுகளும் 30 நிறுவனங்களுக்கு வெள்ளி விருதுகளும், 2020 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிறுவங்களுக்கு தங்க விருதுகளும் 30 நிறுவனங்களுக்கு வெள்ளி விருதுகள் வழங்கப்பட்டன.

அரசாங்க அமைச்சுக்கள், அரசாங்கத் திணைக்களங்கள், அரசாங்கத்தின் விசேட செலவின அலகுகள்,  மாவட்ட செயலகங்கள், மாகாண சபை நிதியங்கள், மாகாணசபைகளின் அமைச்சு திணைக்களம்சார் விசேட செலவின அலகுகள், மாகாண சபைகளின் நியதிச்சட்டநிறுவனங்கள், மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

எட்டாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் எண்ணக்கருவுக்கு அமைய அரச நிறுவனங்களின் நிதி மற்றும் செயல்திறனை முறைமைப்படுத்தும் நோக்கில் அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் கணினிமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் 2015 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகளின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட சுமார் 1000 அரச நிறுவனங்கள் Zoom தொழிநுட்பத்தினூடாக இணைந்துகொண்டனர்.

இதில் இதன்போது, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்ரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

விருது வென்றவர்கள்

 

1 2

3 4

5 6



தொடர்புடைய செய்திகள்

2026-08-11

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரமான ஓகஸ்ட் 18ஆம் திகதி முதுல் 21ஆம் திகதி வரைக்கான காலப்பகுதிக்குரிய பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2496/38 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலினால் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.பி.ப.   5.00     இலங்கை தேசிய புகைப்படக்கலைச்சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து சட்டவாக்க குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.இதனைத் தொடர்ந்து பி.ப.   5.00 மணி முதல் பி.ப.   5.30  மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 19ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நிதிச்சட்டத்தின் கீழான தீர்மானம் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. (இப்பிரேரணை 2026.05.07 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள பாராளுமன்றத்தின் 4 ஆம் இலக்க ஒழுங்குப்              புத்தகத்திற்கான 4 ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது).இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் 20ஆம் திகதி  வியாழக்கிழமை  மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பெண்களையும். இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்சட்டமூலம்) இரண்டாவது மதிப்பீட்டுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஓகஸ்ட் 21ஆம் திகதி   வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


2026-08-11

வாருங்கள்.... காணுங்கள்.... அறிந்துகொள்ளுங்கள்... இது உங்கள் பாராளுமன்றம்

நாளைய தலைவர்களாக உருவாகவிருக்கும் சின்னஞ்சிறு மலர்கள் பாராளுமன்ற வளாகத்தில் அடிக்கடி காணக்கூடிய மற்றுமொரு அழகிய காட்சியாகும்! தியவன்னாவின் அழகை ரசித்தவாறு பாராளுமன்றத்தை நேரில் பார்வையிட்டு, புதியதோர் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கிறது.இலங்கையின் நாலாபுறங்களிலிருந்தும் ஆரம்பப் பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவானோர் தினமும் பாராளுமன்ற வளாகத்தை நேரில் பார்வையிடுவதற்காக வருகை தருகின்றனர்.புத்தகங்கள் மூலம் பாராளுமன்ற முறைமை தொடர்பில் பெற்றுக்கொள்ளும் அறிவை, பாராளுமன்றத்திலேயே நேரடியாக அவர்கள் கண்டறிந்துகொள்ள இதனமூலம் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டுகிறது.பாராளுமன்ற சபா மண்டபம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைப் பார்வையிடுவதற்கு அப்பால், ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் அவர்கள் கற்கும் பாடங்களுக்கும் பொருத்தமான வகையில், பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடு உள்ளிட்ட பணிகள் தொடர்பில் புரிந்துணர்வை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமன்றி, பாராளுமன்றத்தைச் சூழவுள்ள இயற்கை அழகையும், எமது பாராளுமன்றத்தின் சிறப்புமிக்க கட்டடக்கலை மற்றும் கலைநயமிக்க பெறுமதிகள் பற்றிய புரிந்துணர்வையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.வாருங்கள்.... காணுங்கள்... அறிந்துகொள்ளுங்கள்... இது உங்கள் பாராளுமன்றம்!புகைப்படம் –கிட்டி கோவ் (Kiddie Cove) முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் மற்றும் ஆசிரியர்கள் குழுவினர் நேற்று (10) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.


2026-08-07

பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை நிறுவுவதற்கு மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் ஆதரவு

கௌரவ சபாநாயகருக்கும் மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் சந்திப்புசபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பாராளுமன்றத்தின் பத்தாவது திணைக்களமாக மாற்றுவதற்குத் திட்டம்இலங்கை பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை நிறுவுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கும், சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் (Max Planck Foundation for International Peace and the Rule of Law) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கைப் பாராளுமன்றத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளராக ஆதரவளிக்கும் மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளைளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் நிர்வாகப் பணிப்பாளர் யோஹன்னஸ் க்ரூஸ்மார்க் (Johannes Krusemark), மூத்த ஆராய்ச்சி அதிகாரி ஹெய்லி நிக்கோல் எவன்ஸ் (Hailey Nicole Evans) மற்றும் சட்ட ஆலோசகர் ருவினி பெரேரா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.இதன்போது, முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்திற்காகத் தயாரிக்கப்பட்ட திட்ட முன்மொழிவு எனக்கு சமர்ப்பிக்கப்பட்டது.இந்த மையமானது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை மறுசீரமைத்து, இலங்கை பாராளுமன்றத்தின் பத்தாவது திணைக்களமாக நிறுவ எதிர்பார்ப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டார்.இந்த மையத்தின் மூலம்:•    உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் கொள்கை வகுப்பாளர்களாகப் பயிற்றுவித்தல்,•    சட்ட ஆக்கச் செயற்பாடுகளுக்கு அவசியமான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வாய்ப்புகளை விரிவாக்குதல்,•    நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று, அவற்றின் பயனுள்ள தன்மையை மீண்டும் மதிப்பீடு செய்தல் (Post-Legislative Scrutiny),•    ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்களிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல்   ஆகிய நோக்கங்களை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.மேலும், இந்தியாவின் மக்களவை (Lok Sabha) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) பாராளுமன்றத்தில் செயற்படுத்தப்படும் பாராளுமன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு இத்திட்ட முன்மொழிவை வலுப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.இந்த முக்கியமான தேசியப் பணிக்கு வளவாளராக ஆதரவளிக்க ஒப்புக்கொண்ட மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளைக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தின் சட்ட சேவைகள் பணிப்பாளர் திரு. ஜயலத் பெரேரா இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், குழுவால் தயாரிக்கப்பட்டு வரும் திட்ட முன்மொழிவு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  இச்செயல்முறையில் மாக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளும் பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், குறித்த அறக்கட்டளை நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்தார். இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பாராளுமன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் காந்தி பீரிஸ் மற்றும் பாராளுமன்றத்தின் நிதிப் பணிப்பாளர் சரத் குமார ஆகியோர் காணப்படுகின்றனர். இச்சந்திப்பில் கௌரவ சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜனக மகேஷ் அத்தபத்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-08-06

விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் என்பன பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 06) நிறைவேற்றப்பட்டன.குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இன்று முற்பகல் 11.45 மணி முதல் பிற்பகல் 5.40 மணி வரை நடைபெற்றது.விலங்குகள் (திருத்தச்) சட்டமூலத்தை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்  2026.07.21 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்காக சமர்ப்பித்திருந்தார்.இச்சட்டமூலத்தின் மூலம், இதற்கு முன்னர் மாடுகள் மற்றும் எருமைகளைப் போக்குவரத்து செய்வதற்கு மட்டுமே பொருந்தியிருந்த சட்ட ஏற்பாடுகளை மேலும் பல வகையான விலங்குகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்காலத்தில் பன்றிகள், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் போக்குவரத்து செய்யும்போது உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்படுவதுடன், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் பரவுவதைத் தடுப்பது இதன் பிரதான நோக்கமாகும்.தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சரினால் 2026.07.21 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டது.இச்சட்டமூலத்தின் மூலம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபையின் நிறுவன ரீதியான செயல்திறனை மேம்படுத்துதல், நீர் வழங்கல் சேவைகளின் முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் சபையின் பொறுப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks