பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2020-12-07
செய்தி வகைகள் : குழு செய்திகள்
நாட்டின் கிராமப்புற மக்களின் உண்மையான தேவைகளையும் முன்னுரிமைகளையும் அடையாளம் காணும் பொருட்டு புதிய திட்டமான ''வேலையோடு மீண்டும் கிராமத்திற்கு'' (வெட சமக யலி கமட) செயற்திட்டத்தை 14 ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) தெரிவித்தார். நிதி அமைச்சின் ஆலோசனைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய பிரதமர், இந்தத் திட்டத்தை முறையாக அடையாளம் கண்டு கிராமப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் உள்ள மக்களின் உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு குறித்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இக்குழுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், கிராமப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் உள்ள 72% இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதோடு அதிகாரத்துவத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் முன்னுரிமைகளுக்கு அவசியம் அளிக்கப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாராவின் பரிந்துரைக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இதன்போது நிதி அமைச்சு மற்றும் திரைச்சேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆர்ட்டிகல குறிப்பிடும்போது, சம்பந்தப்பட்ட இடங்கள் தொடர்பாக அரசு நிறுவனங்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு காணப்பட வேண்டும் என்றார். இதன்படி, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் உதவியுடன் முன்னுரிமைகள் பட்டியலைத் தயாரிக்க அமைச்சின் செயலாளர் இதன்போது ஒப்புக்கொண்டார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக நாட்டில் சுற்றுலாத்துறை பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால் நிதி அமைச்சு விரைவில் குறித்த விடயத்திற்கு உதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். குறித்த விடயம்தொடர்பாக நிதி அமைச்சு எடுத்த பல நடவடிக்கைகளை இதன்போது அமைச்சின் செயலாளர் குழுவிற்கு விளக்கினார்.
கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, ஓய்வூதிய முரண்பாடுகள் மற்றும் சமுர்த்தி அதிகாரிகளை தேர்தலுக்கு வேட்புமனுக்களை வழங்குவது தொடர்பான சிக்கலான சூழ்நிலையை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேர்தலுக்கு சமுர்த்தி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக நிதி அமைச்சர் மற்றும் கமத்தொழில் அமைச்சருடன் இணைந்து அமைச்சரவை அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும் என்றும், விரைவில் குறித்த பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் இதன்போது ஓய்வூதியம் தொடர்பில் கேள்வியெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார அவர்களின் கருத்துக்கு பதிலளித்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்காக மட்டும் 1.1 டிரில்லியன் டொலர் ஒதுக்கப்படுகின்றது என்றார். வரவுசெலவுத்திட்டத்தின்படி, 50,000 புதிய பட்டதாரிகள் பொது சேவைக்கு சேர்க்கப்படுவதோடு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் 35,000 ரூபா சம்பளம் பெறும் 100,000 இளைஞர்களின் சம்பளமும் இதில் உள்ளீர்க்கப்பட வேண்டுமென்று இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எந்தவொரு அரசாங்கமும் தனது நிதியை நிர்வகிக்க இது ஒரு கடினமான சந்தர்ப்பமாகும் என்றும் ஆனாலும் நிதியமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் இந்த சூழ்நிலையை முறையாக நிர்வகிக் கடும் பிரயயத்தனங்களை மேற்கொள்கின்றனர் என்றார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பமான நிதியமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், அமைச்சர் காமினி லொக்குகே, இராஜாங் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, குணபால ரத்ணசேகர, பிரமித பண்டார தென்னக்கோன், டபிள்யு.டி. வீரசிங்க மற்றும் மொஹமட் முஸம்மில் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இவர்களுக்கு மேலதிகமாக அரச அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சு மற்றும் திரைச்சேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆர்ட்டிகல உள்ளிட்ட நிதியமைச்சின் உயர்நிலை அதிகாரிகள் பலரும் இந்தக்குழுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


