E   |   සි   |  

2014 ஒக்டோபர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சிச் சேவை
(ii) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை பத்திரிகைப் பேரவை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2013 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


2012 பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அஜித் குமார அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கௌரவ ஜோன் அமரதுங்கஅவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் விடயங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஒக்டோபர் 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks