E   |   සි   |  

2020 டிசம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2019 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுகள் (நூல் 1 மற்றும் நூல் 2)


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பியங்கர ஜயரத்ன                 -     இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ ஜயந்த சமரவீர                      -     மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ கே. காதர் மஸ்தான்                    
(iv)    கௌரவ சம்பத் அதுகோரல                 -    ஏழு மனுக்கள்
(v)    கௌரவ வசந்த யாப்பாபண்டார                    
(vi)    கௌரவ வீரசுமன வீரசிங்ஹ               -    இரண்டு மனுக்கள்
(vii)    கௌரவ யதாமிணீ குணவர்தன
(viii)    கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா                    
(ix)    கௌரவ திலிப் வெதஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்தல்

மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு வழங்கிய இடைக்கால அறிக்கை தொடர்பான கூற்றொன்றினை நீதி அமைச்சர் கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாம் நாள் - குழு நிலை விவாதம்


அதனையடுத்து, 2114 மணியளவில் பாராளுமன்றமானது 2020 டிசம்பர் 10ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2021]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks